districts

img

நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருநெல்வேலி. ஆக 30- நெல்லை மாநகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 9  ஆம் தேதி பணியின் போது  நிகழ்ந்த விபத்தில்   உயிரிழந்த  தூய்மை தொழிலாளி பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராடினர்.அதற்காக அவர்களை பழிவாங்கும் வகையில் கடந்த ஆகஸ்ட்  24ஆம் தேதி முதல் வேலை வழங்க மாநகராட்சி  மறுத்து  வருகிறது. மேயர் மற்றும் ஆணையாளரோடு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் வேலை வழங்க மறுத்துவிட்ட காரணத்தால் வெள்ளிக்கிழமையன்று    நெல்லை மாநகராட்சி முன்பு  சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்கள் வேலை வழங்கும் வரை காத்திருப்புப் போராட்டத்தை  நடத்தினர்,  காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் ஆர்.மோகன்,செயலாளர் எஸ்.மாரியப்பன், பொருளாளர் எஸ்.செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.