சின்னாளபட்டி, ஜூன் 2- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகள், சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, அய் யம்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆத்தூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் (1431-ம் பசலி வரு வாய் தீர்வாயம்) ஜூன் 1 முதல் நடை பெறும் ஜமாபந்தியில் கலந்து கொண்டு வருவாய்த்துறை சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆத்தூர் தாலுகா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனுக் களை கொடுத்து தீர்வு பெற்று வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஷேக் மொகைதீன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் வட்டாட்சியர் சரவணன், தனி வட்டாட்சியர் நிர்மலாகிரேஷ், தலைமை நில அளவர் சபரிசங்கர், மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணிசாமி, வருவாய் ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு வழங்கினர். தல் நாள் நடை பெற்ற ஜமாபந்தியில் 106 பேர் மனுக் கொடுத் தனர். அவர்களில் 8 பேருக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டது.