districts

img

பாதுகாப்பு உபகரணமின்றி சாக்கடை அள்ளும் தொழிலாளிகள்

கையால் மலம் அள்ளுவது,  அள்ளச்சொல்வது குற்றத்திலும் கொடும் குற்றம் என சட்டம் சொல் கிறது. ஆனால், சேலத்தில் எவ்வித  பாதுகாப்பு உபகரணமுமின்றி தூய்மை பணியாளர்கள் வெறும்  கையால் மலம் கலந்த சாக்கடை யை அள்ளி அகற்றி வருகிறார்கள்.  சட்டத்திற்கே சவால் விடுகிறது சேலம் மாநகராட்சியின் நிர் வாகம். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு களில் சேகரமாகும் குப்பை களை நாள்தோறும் சுழற்சி முறை யில் தூய்மை பணியாளர்கள் சேகரித்து, அதனை சேலம் மாந கரில் நான்கு பகுதிகளில் உள்ள  திடக்கழிவு மேலாண்மை திட்ட  மையத்திற்கு கொண்டு சேர்க் கின்றனர். அப்படி பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, காலுறை, குப்பை களை அல்ல தேவையான உபகர ணங்கள் ஆகியவற்றை மாநக ராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். ஆனால், சேலம் மாநக ராட்சி நிர்வாகம் இதுபோன்ற பாது காப்பு கவசங்கள் மற்றும் உபகர ணங்களை தூய்மை பணியாளர் களுக்கு வழங்கியதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சேலம் மாநகராட்சி, 44 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் இருவர்  கையுறை, காலுரை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங் களும் இல்லாமல், மலம் கலந்த சாக்கடை கழிவுகளை தங்கள் கைகளால் அள்ளி சுத்தம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்காட்சிகள் தற் போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்தவித மான பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல், கைகளால் மலம் கழிந்த சாக்கடையை அள்ளும் அவலத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் சேலம் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது மிகக்கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்கிற  குரல் வலுத்து வருகிறது. அதே  நேரத்தில் மாநகராட்சி அதிகாரி களோ நாங்கள் உபகரணங்கள் கொடுக்கிறோம், அவர்கள் பயன் படுத்த மறுக்கிறார்கள் என்கிற சொத்தையான வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகி றார்கள்.

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உபகர ணங்களையும் வழங்கி, அதனை தூய்மை பணியாளர்கள் பயன் படுத்துகின்றனரா? என்பதை நாள் தோறும் சுகாதாரத்துறை அதிகாரி கள் கண்காணிக்க வேண்டும்.  இதுகுறித்து சேலம் மாநக ராட்சியின் 44 ஆவது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கூறுகை யில், அறிவியல் தொழிற்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலகட்டத்தில் எந்தவிதமான உயிர் பாதுகாப்பு கவசமும் இல்லாமல் சாக்கடை யில் இறங்கியதோடு மட்டுமல்லா மல் வெறும் கையில் மலம் கலந்த சாக்கடையை அள்ளி வரு வது வேதனையை ஏற்படுத்துகி றது. இங்கிருந்த அதிகாரிகளிடம் இது நியாயமா? என கேட்டோம். அதற்கு அவர், சாக்கடையை கையில் அல்லாமல் வேறு எதில் அள்ளுவது என்று திமிராக கூறு கிறார். இதுபோன்றவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த அவல நிலை குறித்து சம்பந்தப்பட்ட 44 ஆவது வார்டு உறுப்பினர் இமையவரம்பனிடம் கேட்டபோது, இப்பகுதியில் புதி தாக சாக்கடை கால்வாய் அமைப் பதற்காக ஒப்பந்ததாரரிடம் பணி  ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்  சில காலமாக பணியை நிறுத்தி விட்டு தற்பொழுது இந்த பணியை  தொடர்ந்து உள்ளார். எந்தவித மான பாதுகாப்பு கவசமும் இல் லாமல் சாக்கடை அள்ளியது சேலம் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் அல்ல என்றும், அவர்கள் ஒப்பந்ததாரரின் பணி யாளர்கள் என்றார். 

மேலும், இதுபோன்ற அவலங் களை தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒருபோதும் அனும திக்க மாட்டேன். அதுவும் தனது இல்லம் அருகே இதுபோன்ற அவலம் நடந்திருப்பது நான் எப்படி அனுமதிப்பேன். இது வேதனையாக உள்ளது. சம்பந் தப்பட்ட ஒப்பந்ததாரரின் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்பேன். சேலம்  மாநகராட்சியில் தூய்மை பணி யாளர்கள் அனைவரும் பாது காப்பு கவசங்கள் அணிந்து  நாள்தோறும் பணியாற்றுகிறார் களா? என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று வரும் இயல்பு  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட உள்ளதாகவும் தெரிவித் தார். வெறும் கையால் மனிதர்கள்  சாக்கடை அள்ளுவதும், இது குறித்து கேள்வி எழுப்பினால், ஒருவர் மற்றொருவரை கைகாட்டு வதும், அவர் இன்னொருவரை கைகாட்டுவதும் தொடர்ந்து நடை பெறுகிறது. அண்மையில் உச்ச நீதிமன்றம் மலக்குழிக்குள் மனி தர்கள் இறங்குவதும், வெறும் கையால் சாக்கடை அள்ளுகிற சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிர் வாகத்தின் ஆட்சியர், ஆணை யரே பொறுப்பு, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தது. ஆயிரம் உத்த ரவுகள் நீதிமன்றங்கள் பிறப்பித் தாலும், ஒடுக்கப்பட்ட மக்களின்  மனநிலை அறியாமல் அதிகா ரத்தில் அமர்ந்திருப்பவர்கள் சட் டத்திற்கே சவால் விடுவதுதான் இன்றளவும் தொடரும் அவலம். அதில், சேலம் மாநகராட்சியும் சளைத்ததல்ல என்பதே தற்போ தைய கண்முன் உள்ள சாட்சி. - சேலம் எழில்