தேனி, ஜன.24- தேனி அல்லிநகரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர், தனது கணவரை ஹெல்மெட்டால் தாக்கி யதால் விலா எலும்பு முறிந்து நுரை யீரல் பகுதியில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர கண்காணிப்பில் இருப்பதாக வும், சம்பந்தப்பட்ட சார்பு ஆய்வா ளர் மீது நடவடிக்கை எடுக்கும் படி தேனி ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார். இதுதொடர்பாக பெரியகுளம் அருகே கைலாசபட்டியை சேர்ந்த கணேசன் மனைவி க.வைரமணி அளித்த புகாரில் தெரிவித்துள்ளதா வது: தனது கணவர் கடந்த 17 ஆம் தேதி தேனியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். காவல்துறையினர் வாகன தணிக் கையில் ஈடுபட்டுள்ளனர். அப் போது வாகனத்தில் மது பாட்டில் இருப்பதால் அருகே நிறுத்தி விட்டு காவல் அதிகாரியை சந்தித்துள்ளார். அப்போது காவல் சார்பு ஆய்வா ளர் முகமது யாஹியா என்பவர் ஏன் வாகனத்தை நிறுத்தாமல் சென் றாய் என கூறி ஹெல்மெட்டால் தாக்கியுள்ளார். பின்னர் மது அருந்தி வாகனம் ஒட்டியதாக வழக்கு பதிவு செய்து இரவு 11 மணிக்கு வீட்டுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் என் கணவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித் தோம், முதலுதவி சிகிச்சைக்கு பின், பெரியகுளம் அரசு மருத்துவ மனைக்கு செல்லுமாறு கூறி விட்ட னர். அதன் பின்னர் அரசு மருத்துவ மனைக்கு சென்று ஸ்கேன் பார்த்த போது நெஞ்சு எலும்பு முறிந்து, உள் நுரையீரல் பாதிக்கப்பட்டுள் ளதாக தெரிவித்து, தேனி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிவிட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண் டும் என கூறி அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது ரத்த கசிவு தொடர்ந்து உள்ளது. எனவே, எனது கணவர் தாக்கப்பட்ட சம்ப வத்திற்கு நீதி வழங்கி, தாழ்த் தப்பட்டோர் வன்கொடுமை சட் டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.