இராமநாதபுரம், டிச.1- இராமநாதபுரம் மாவட் டம் அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் இராம நாதபுரம் மாவட்ட சிறப்பு பேரவை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே.ஜி.வசந்த் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் டபிள்யு.வில்லியம் ஜாய்சி பேரவையை துவக்கி வைத் தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எம்.சிவாஜி வாழ்த் துரை வழங்கினார். மாவட் டச் செயலாளர் எம்.வசந்த் சுர்ஜித் பேசினார். மாநில இணைச் செயலாளர் ஜி.கே. மோகன் நிறைவுரையாற்றி னார். 16 பேர் கொண்ட மாவட் டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக எம்.கிஷோர், செயலாளராக டபிள்யு.வில்லியம் ஜாய்சி, துணைத் தலைவர்களாக ஜெகன், விக்கி, துணைச் செயலாளர்களாக மாதேஷ், ரித்தீஷ் தேர்வு செய்யப்பட்ட னர்.