தேனி, ஆக.22- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட் டுள்ள 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை தமிழ்நாடு முதல்வர் ஸ்டா லின் காணொலி காட்சி வாயி லாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார். தேனி அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனை சுமார் 6.75 கோடி மதிப்பீட்டில் மூன்று தளங்களுடன், வெளிநோயா ளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவுகளுடன் கட்டப்பட்டுள் ளது. மொத்தம் 50 படுக்கை களுடன் 35,198 சதுர அடி பரப்பில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை கட்டிடத்தில் சித்த மருத்து வம் மற்றும் மருத்துவப் பிரிவுகளின் வெளிநோயா ளர் பிரிவு, மூலம்பௌத்தி ரம், கட்டிகள் போன்ற வற்றிற்கு செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சை அரங்கம், பக்கவாதம் மறு வாழ்வு மையம், தெரபி மற் றும் தொக்கணம் அறை, மருந்தகம், அவசர சிகிச்சை அறை, ஆய்வறை, வர்ம சிகிச்சை, யோகா அக்குபஞ் சர் சிகிச்சை, மண் குளியல், சூரியக்குளியல், யோகா பயிற்சிக் கூடம், பெண்கள் இயற்கை மருத்துவ பிரிவு, உணவு விடுதி, கூட்ட ரங்கம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ பிரிவு போன்ற வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ளது. ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ,தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, இணை இயக்குநர் (சுகாதாரப்பணி கள்) ரமேஷ்பாபு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.