முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறுத் துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் அரசு விழா நடைபெறவுள்ள தேனி அன்னஞ்சி புறவழிச்சாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழா முன்னேற்பாடு பணிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஏப்ரல் 28 அன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் உடனிருந்தனர்.