districts

img

அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சாரம்

மதுரை, ஏப். 18-  அரசு விரைவு போக்கு வரத்து கழகங்களில் படிப்  படியாக முன்பதிவு, கேண் டீன், பாதுகாப்பு, துப்புரவு மற்றும் பராமரிப்பு உட்பட அனைத்து பிரிவுகளிலும் தனியார்மைய கொள்கை யை அமல்படுத்தி வருகின்ற அரசு போக்குவரத்து கழக  நிர்வாகம் மற்றும் தமிழக  அரசு தற்போது ஓட்டுநர் களை வேலை வாய்ப்பு அலு வலகம் மூலம் நியமிக்காமல் தனியார் மூலம் அவுட் சோர்  சிங் முறையில் நிரப்ப எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டித்து சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் மதுரை மேலூர் சாலையில் அமைந்துள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணி மனை முன்பு தலைவர் என். லட்சுமண பெருமாள் தலை மையில் கண்டன வாயிற் கூட்டம் செவ்வாயன்று  நடை பெற்றது. கோரிக்கைகளை விளக்கி செயலாளர் பி. செல்லத்துரை பேசினார், சிஐடியு மாவட்ட செயலாளர்  இரா.லெனின், அரசு விரைவு போக்குவரத்து சங்க முன்  னாள் தலைவர் ஜி. செந்தில், அரசு விரைவு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்ற  நல அமைப்பு மாநில துணைத்தலைவர் என். மகா லிங்கம், அரசு போக்கு வரத்து மதுரை தொழிலாளர் சங்க தலைவர் பி. எம். அழ கர்சாமி, வாலிபர் சங்க மாவட்  டச் செயலாளர் டி. செல்வா,  மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் க. பாலமுருகன் ஆகியோர் ஆதரித்துப் பேசி னர். பொருளாளர் ரவி மற் றும் பலர் பங்கேற்றனர்.