திண்டுக்கல், மார்ச் 15- யானை மிதித்து பலியான விவ சாயிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண் டுக்கல் மாவட்டக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் திண்டுக்கல் மாவட்ட சிறப்புப் பேரவை மாவட்டத்தலை வர் என்.பெருமாள் தலைமை யில் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் பெ.சண்முகம், மாநிலப்பொருளா ளர் கே.பி.பெருமாள், மாவட் டச்செயலாளர் எம்.இராமசாமி ஆகி யோர் உரையாற்றினர். இந்த பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. சமீப காலமாக யானை, காட் டெருமை, பன்றி போன்ற விலங்கு களால் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள ராமபட்டினம் புதூர், சத்திரப்பட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் யானை மிதித்து பலியாகினர்.
உயி ரிழந்த விவசாயிகளின் குடும் பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வெண்டும். வன விலங்கு கள் விவசாய நிலங்களுக்குள் வரா மல் தடுத்திட மின்வேலிகள் மற்றும் அகழிகள் அமைத்திட வேண்டும். அவைகளுக்கு தேவையான உணவு, குடிநீர் வனத்திற்குள் கிடைக்க வனத்துறை மற்றும் அரசு உட னடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையம் பழனி வட்டம் மானூர் பகுதி யைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக் கர் நிலங்களில் நெல் உற்பத்தி பிர தானமான விவசாயமாக உள்ளது. எனவே நீண்ட கால கோரிக்கை யான நெல் கொள்முதல் நிலையம் மானூரில் அமைக்க மாவட்ட நிர் வாகம் முன்வர வேண்டும். உபரி நிலங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உபரி நிலங்களை வேறு பணி களுக்கு மாற்றக்கூடாது. குறிப்பாக பழனி வருவாய் கோட்டத்திற்கு உட் பட்ட தும்பலப்பட்டி கிராமத்தில் 333/1 மற்றம் சில பிரிவுகளில் உள்ள உபரி நிலங்களை 37 விவசாயி களுக்கு அரசு ஒப்படை செய்தது. ஆனால் அதிகாரிகள் துஷ்பிரயோ கம் செய்து அவர்களை வெளி யேற்றிவிட்டு போடப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிட வேண்டும். அந்த நிலங்களை இதுவரை அனு பவித்து வந்த விவசாயிகளுக்கே பட்டா உள்ளிட்ட நில ஆவணங் களை வழங்க வேண்டும். (நநி)