விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 16 அன்று மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி, திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துகுமார் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.