திருவில்லிபுத்தூர், ஜூலை 20- தமிழக அரசு அறிவித் துள்ள காலை சிற்றுண்டியை மகளிர் சுய உதவி குழு மூலம் வழங்கக்கூடாது. சத்துணவு ஊழியர்கள் மூலம் காலை சிற்றுண்டியை வழங்க அர சாணை பிறப்பிக்க வேண் டும். சத்துணவு ஊழியர் களை முழு நேர நிரந்தர ஊழி யராக்க வேண்டும் என்று வலி யுறுத்தி திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்குசங்க ஒன்றிய செயலாளர் கோவிந் தன் தலைமை வைத்தார். ஒன்றிய தலைவர் மின்னல் கொடி முன்னிலை வகித் தார். மாவட்ட செயலாளர் கிளாரா கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.