districts

img

நிலத்திற்குள் அத்துமீறி 500 தேக்குமரங்களை வெட்டிய ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.

திண்டுக்கல், மே 30- விவசாய நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து 500 தேக்கு மரங்களை வெட்டிச்  சென்ற ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி உள்  ளிட்ட காவலர்கள் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட  விவசாயிக்கு இழப்பீட்டை பெற்றுத் தர  வேண்டும்  என்று திண்டுக்கல் ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள்  குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.   இதுதொடர்பாக சங்கத்தின் மாவட்டச்  செயலாளர் எம்.ராமசாமி பேசுகையில்,     ரெட்டியார்சத்திரம் சிரங்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரிச்சர்டு தனது நிலத்தில்  500 தேக்கு மரங்களை கடந்த 20 ஆண்டு களாக பாதுகாத்து பராமரித்து வந்தார். 4 வழிச்சாலைக்கு இவரது நிலத்தை எடுத்  துக்கொண்ட அதிகாரிகள் இந்த 500   மரங்களுக்காக ரூ.2 கோடியே 78 லட்சம்  ரூபாய் மதிப்பீடு செய்து கடந்த 15.7.2022 அன்று விவசாயி ரிச்சர்டுக்கு  அவார்டு நகல்  அனுப்பியது. இந்நிலையில் பணத்தை தரா மல் கடந்த 10 மாதங்களாக இழுத்தடித்து விட்டு தற்போது அவருக்கு உரிய இழப்  பீட்டை கொடுக்காமல் எந்த முன்னறி விப்புமின்றி ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி.  தலைமையில் போலீசார் திங்களன்று  500 தேக்கு மரங்களை வெட்டிச்சென்றுள்ளனர்.  இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயி ரிச்சர்டுக்கு உரிய இழப்  பீடு ரூ.2 கோடியே, 78 லட்சத்தை பெற்றுத்  தரவேண்டும். இது போன்ற சிவில் வழக்கு களில் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விவ சாயி நிலத்தில் அத்துமீறி நுழைந்து அராஜ கம் செய்து மரங்களை வெட்டிச்சென்றுள் ளார். எனவே அவர் மீதும், அவருடன் சென்ற காவலர்கள் மீதும் துறை ரீதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இது தொடர்பாக விரைந்து நடவ டிக்கை எடுப்பதாக ஆட்சியர் பூங்கொடி உறுதியளித்தார்.