விருதுநகர், ஜூலை.22- தென்னை விவசாயம் அதிக அளவில் இல்லாத சாத்தூர் பகுதி யில் கொப்பரை தேங்காய் கொள் முதல் நிலையம் அமைப்பதை கைவிட்டு தென்னை விவசாயம் அதிகமாக உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டுமென விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்த னர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கில் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ். நாராயணன், வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், விவசாயி கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலை யத்தை காலநீட்டிப்பு செய்து 15 தினங்கள் கழித்து மூட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக் கை விடுத்தனர்.
மேலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள கொப் பரை தேங்காய் கொள்முதல் நிலை யத்தை மூடிவிட்டு தென்னை விவ சாயம் நிறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதி யான வத்திராயிருப்பு பகுதியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். தற் போது வத்திராயிருப்பு பகுதியில் மிக குறைவான விலையில் கொப்பரை தேங்காய் ரூ. 7 க்கு கொள்முதல் செய் கின்றனர். இதனால் தென்னை விவ சாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் அ.விஜயமுருகன் தெரிவித்தார். வத்ராப் பகுதியில் கொள்முதல் நிலையம் அதற்கு பதிலளித்த ஆட்சியர், விரைவில் வத்ராப் பகுதியில் கொள் முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற சிறப் பு முகாம் நடத்த வேண்டும். எம்.ரெட்டியபட்டி பகுதி யில் உள்ள 10 கிராமங்களில் கடந்த 2020-2021 ஆம் ஆண் டிற்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட வில்லை. இதேபோல், ஆமத்தூர், சாத்தூர் பகுதியைச் சேர்ந்த விவ சாயிகளுக்கும் கிடைக்கவில்லை யென விவசாயிகள் புகார் தெரி வித்தனர்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காத வர்கள் ஜூலை 25 இல் வேளாண் அலுவலகத்திற்கு சென்று உரிய காரணத்தை அறிந்து கொள்ளலாம். வேளாண் துறை அதிகாரிகள், ஒரு சில விவசாயிகளை மட்டும் சந்தித்து விட்டு சென்று விடுகின்ற னர். அனைவரையும் அழைத்து பயிர் கள் குறித்தும், பயிரில் உள்ள பூச்சி தாக்குதல் குறித்தும் அதை தடுக்கும் முறை குறித்தும் ஆலோசிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அரசகுளம் கண்மாய் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண் டும். நாலுரில் நெல் உலர்களம் சேத மடைந்திருப்பதை சரி செய்ய வேண்டும் எனவும் விவசாயி தெரி வித்தார். நரிக்குடி பகுதியில் காட்டு பன்றிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. எனவே, அவற்றை கட்டுப்படுத்த வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாவாலி கண்மா ய் மடை பழுது காரணமாக மழை நீர் தேங்காமல் வெளியேறு கிறது. எனவே, மடைகளை சீர மைத்து தண்ணீர் தேக்க வழி வகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இவ்வறாக விவாதம் நடைபெற்றது.