நாகர்கோவில், அக்.27- நகர்புற வறுமை ஒழிப்புக் காக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் போன்று நகர்புற வேலை வாய்ப்புக்கான திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர் த்தும் நோக்கில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் ‘நகர்புற வேலை வாய்ப்பு திட்டம்’ செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறி விப்பு வெளியிடப்பட்டது. அதன்படி திறனற்றவர்கள், பாதி திறன் உடையவர்கள், முழு திறன் உடையவர்கள் என்று நகர ஏழைகளை 3 ஆக பிரித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நகரங்களில் உள் கட்டமைப்பை மேம் படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், வெள்ளகால மீட்பு பணி, பசுமையாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்கு வித்தல் உள்ளிட்ட பணி களை தினக்கூலி அடிப்ப டையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு அட்டை மூலம், அவரவர் திறனுக் கேற்ற வேலையை சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்பிடம் கேட்டுப் பெறலாம். பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியின் வடக்கு மண்டலம், கிள்ளியூர் பேரூ ராட்சிகளில் சோதனை முறை யில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிக ளிலும் அமல்படுத்திடவும், வருடத்திற்கு 150 நாட்கள் வேலை, 600 ரூபாய் கூலி வழங்கிடவும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அக்டோபர் 27 புத னன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எச்.ராஜதாஸ், மாவட்ட நிர்வாகிகள் கிருசாந்துமேரி, ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ரவி பேசினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.