யானை கஜம் அருவியில் மூழ்கி தொழிலாளி பலி
கடமலைக்குண்டு, நவ.24- கடலூர் மாவட்டம் வண்டிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 40). இவர் புதன்கிழமை மயிலா டும்பாறை அருகே மாளிகைப்பாறை கருப்பசாமி கோவி லுக்கு வந்திருந்தார். சாமி தரிசனம் முடிந்து வியா ழக்கிழமை காலை கோவில் அருகே உள்ள யானை கஜம் அருவியில் குளிப்பதற்காக சென்றார். அங்கு குளித் துக் கொண்டிருக்கும் போது ஜெயமூர்த்தி எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாத தால் நீரில் தத்தளித்து கொண்டிருந்த ஜெயமூர்த்தியின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி ஜெய மூர்த்தி உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் யானை கஜம் அருவிக்கு சென்று ஜெயமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்ப வம் தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர் திருட்டு வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது
மதுரை, நவ.24- மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், திரு மங்கலம் நகர் காவல் நிலைத்தில் இருசக்கர வாக னங்கள் திருடு போனது சம்மந்தமாக பல்வேறு வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன. இந்நிலையில் நவம்பர் 24 வியாழனன்று மேற்படி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட இரு நபர்கள் தேனி யைச் சேர்ந்த பால்பாண்டி (30), மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 இருசக்கர வாக னங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.
ரேசன்கடை பூட்டை உடைத்து சீனி, துவரம்பருப்பு திருட்டு
தேனி, நவ.24- பெரியகுளம் நேரு நகரில் ரேசன் கடையில் பூட்டை உடைத்து பொருட்களை திருடியதாக பெரியகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது. கடை விற்பனையாளர் அழகர்(43) பதிவேட்டின்படி பொருட்களை சரிபார்த்த போது 100கிலோ சீனி, 250கிலோ துவரம்பரும்பு உள்ளிட்ட மொத்தம் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.இது குறித்து பெரியகுளம் காவல் சார்பு ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பணி நியமன ஆணை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார்
தேனி,நவ.24- ஆண்டிபட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாள ராக பணிபுரிந்த பாண்டி.என்பவர் இறந்ததால் இவரது மகள் சுபலட்சுமிக்கு கோம்பை பேரூராட்சியில் அலு வலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இதற்கான பணி நியமன ஆணையை, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், கேஎஸ்.சர வணக்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல் வன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நத்தம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
நத்தம், நவ,24- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி யை சேர்ந்தவர் இந்துமதி.(வயது 37).இவருக்கு திருமண மாகி 7 வருடம் ஆகிறது. கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்துமதி விஷத்தை சாப்பிட்டு விட்டார். ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் இந்து மதி இறந்தார். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்புப் பாதை விரிசலை கண்டு பொதிகை ரயிலை நிறுத்திய பராமரிப்பாளருக்கு வெகுமதியுடன் பாராட்டு
சிவகாசி, நவ.24- சிவகாசி அருகே ரயில்வே இருப்புப் பாதையில் ஏற்பட்டிருந்த விரிசலைக் கண்டு பொதிகை அதிவிரைவு ரயிலை நிறுத்தி பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய இருப்பு பாதை பராமரிப்பாளருக்கு கோட்ட மேலாளர் ரூ.3 ஆயிரம் பரிசுத் தொகை யுடன் பாராட்டுச் சான்றும் வழங்கினார். ரயில்கள் சென்று வரும் இருப்புப் பாதையானது, அவை சென்று வர ஏற்ற வகையில் உள்ளதா? என்பதை கண்கா ணிப்பது அந்தந்தப் பகுதியைச் சோந்த ரயில் பாதைப் பராமரிப்புப் பணியாளர் களின் வேலையாகும். இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரயில் பாதை பராமரிப்புப் பணியாளராக பணி புரிந்து வரும் கருப்பசாமி, ரயில் பாதை யில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப் போது, ஒரு இடத்தில் ரயில் பாதையில் இருந்த இணைப்பு விடுபட்டு, இடைவெளி ஏற்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளார். அப்போது, அதிகாலை சென்னையிலி ருந்து - செங்கோட்டை நோக்கி பொதிகை அதிவிரைவு வண்டியானது சிவகாசி - திரு வில்லிபுத்தூர் இடையே வந்து கொண்டி ருப்பதை பார்த்தார். பின்பு உடனடியாக, ரயில் வரும் திசையை நோக்கி ஓடிச் சென்று, ரயிலுக்கு முன்பாக சிவப்புக் கொடியைக் காட்டி ரயிலை நிறுத்தியுள் ளார். இதை கவனித்த ரயில் என்ஜின் ஓட்டு நர் வண்டியை நிறுத்தியுள்ளார். பின்பு, கருப்பசாமி, தண்டவாளத்தில் விரிசல் உள்ளது பற்றி அவரிடம் தெரி வித்துள்ளார். இதனால் அதிகாலை நேரத்தில் பெரும் ரயில் விபத்து ஏற்பட்டி ருப்பதை கருப்பசாமி தடுத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த், துரிதமாக செயல்பட்டு விபத்தை தடுக்கும் பணியில் பொறுப்புடன் செயல் பட்ட சிவகாசி ரயில்வே பாதை பராம ரிப்புப் பணியாளர் கருப்பசாமியை பாராட்டி, ரூ. 3 ஆயிரம் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌர வித்தார்.
இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழகம் வருகை
இராமநாதபுரம், நவ.24- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வியாழக்கிழமையன்று வந்தனர். தகவல் கிடைத்த கடலோர பாதுகாப்பு குழும சார்பு ஆய்வாளர் காளிதாஸ் தலைமையில் சென்ற போலீசார் 5 பேரையும் பாதுகாப்புடன் அழைத்து மண்டபம் கட லோர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசா ரணை மேற்கொண்டனர். இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த கணேசமூர்த்தி(34), அவரது மனைவி ராஜமதி (29). குழந்தைகள் கஜனா(13). தினா (11), சஜிசன் (6 மாதம்) ஆகியோர் ஆவர். பொருளாதார பாதிப்பு காரணமாக கடு மையாக விலைவாசி உயர்ந்துள்ளதால் பிழைக்க முடி யாத நிலையில் தாங்கள் தனுஷ்கோடி வந்ததாக தெரி வித்தனர். இதனைதொடர்ந்து, மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்து சென்று அதி காரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு தனி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.
பேருந்து மோதி கல்லூரி மாணவர் பலி
மதுரை,நவ.24- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் செல்லும் சாலை யில் உள்ள சிக்கந்தர்சாவடியை சேர்ந்தவர் பிரவீன், மற்றும் கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது, ஆனைக்குளத்தை சேர்ந்தவர் சரவணன். நண்பர்களாக இவர்கள் 3 பேரும் மதுரை அழகர்கோவில் அருகே கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் வியாழனன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றதாக கூறப்படு கிறது. அழகர்கோவில் அருகே முன்னால் சென்ற அவர் களது கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கல்லூரி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு. படுகாயமடைந்தனர். அவர் களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பல னின்றி சரவணன் இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக மேலவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெரசா பல்கலை. கூடைப்பந்துப்போட்டி பெரியகுளம் மகளிர் கல்லூரி முதலிடம்
தேனி, நவ.24- பெரியகுளத்தில் நடைபெற்ற அன்னை தெரசா பல்க லைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப் பந்து போட்டியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி முதலிடம் பெற்றது. அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் இணைக்கப் பட்ட 7 கல்லூரிகளுக்கு இடையேயோன கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 34:11 என்ற புள்ளிக்கணக்கில் ஜெயராஜ் அன்ன பாக்கியம் மகளிர் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாம் பரிசை தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், மூன்றாம்பரிசை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக அணியும், நான்காம்பரிசை திண்டுக்கல் எம்விஎம்.கல்லூரி அணியும் பெற்றது. முதலிடம் பெற்ற ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பி்ல் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பேருந்து பயணத்தில் மூதாட்டியிடம் நகை,பணம் திருட்டு
அருப்புக்கோட்டை,நவ.24- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்து பயணத்தின்போது மூதாட்டியிடம் 3 பவுன் நகைகள்,ரூ6,500 ரொக்கப்பணம் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் மெட்டில்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் ராமலட்சுமி(70).இவர் கடந்த புதன்கிழமை சிவகங்கை செல்வதற்காக அருப்புக்கோட்டை நகருக்கு வந்து அங்கிருந்து சிவ கங்கை செல்லும் அரசுப்பேருந்தில் ஏறினாராம்.அப் பேருந்து அருப்புக்கோட்டை எல்லையான காந்திநகர் வந்தபோது பேருந்து பயணச்சீட்டிற்குப்பணம் தருவ தற்காக தான் வைத்திருந்த கட்டைப் பையில் ( ஜூட் பேக்) பணப்பையை எடுக்க முற்பட்டபோது அப்பையைக் காணாது அதிர்ச்சியடைந்தார்.உடன் அவர் அமர்ந்தி ருந்த இருக்கை முதலாக எங்கு தேடியும் அப்பையைக் காணவில்லையாம்.இதனால் பேருந்து பயணத்தை ரத்து செய்த மூதாட்டி தனது உறவினர்கள் உதவியால் அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்திற்கு புதன்கிழமை இரவு வந்து புகார் அளித்தார். அப்புகாரில் தனது பணப்பையில் மொத்தம் 3 பவுன் மதிப்புள்ள சிறிய நகைகளும், ரூ6,500 ரொக்கப்பணமும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஏடிஎம் அட்டை என அனைத்தும் அப்பணப்பையுடன் சேர்ந்து திருடு போன தாக அவர் குறிப்பிட்டிருந்தார்.இதுதொடர்பாக வழக்கு பதிந்த நகர் காவல்துறையினர்,சிசிடிவி காமிரா காட்சிகள் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைப் பிடிக்க விசாரணை மேற்கொண்டனர்.
சிபிஎம் புதிய கிளை அமைப்பு
மதுரை, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய பகுதி 2 ஆம் பகுதிக்குழு சார்பில் தெற்கு மாசி வீதி யில் புதிய கிளை அமைக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மா . கணேசன். மாவட்டக் குழு உறுப்பினர் கள் பி. கோபிநாத், யு .எஸ் .அபுதாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிளைச் செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.
போடியில் மயங்கிய தொழிலாளி சாவு: காவல்துறையினர் விசாரணை
தேனி, நவ.24- தேனி மாவட்டம், போடி அருகே பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் நவீன்குமார் (25). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரசவத்திற்காக தாய்வீட்டிற்கு சென்ற நிலையில் தனியே வசித்து வந்துள்ளார். தனது மோட்டார் பைக்கில் போடி சாலை காளியம்மன் கோவில் அருகே உள்ள சுகாதார வளாக கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி தண்ணீர் பாட்டில் வாங்கி வரச் சொல்லியுள்ளார். சுகா தார வளாக கழிப்பிட மேற்பார்வையாளர் தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து பார்த்தபோது நவீன்குமார் மோட் டார் பைக்கிலேயே சரிந்து விழுந்து இறந்துவிட்டது தெரிந்தது. இதுகுறித்து நவீன்குமாரின் அண்ணன் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்த கோரி வழக்கு
மதுரை, நவ.24- மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, இராமநாதபுரம், தேனி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை உபகரண வசதி ஏற்படுத்தக்கோரி உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சிறந்த மருத்துவ வசதிகளைப் பெற தென் தமி ழக மக்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை யே நம்பியுள்ளனர். ஆனால் அவசர இருதய சிகிச்சை பெற மருத்துவர்கள் 24 மணிநேரமும் மருத்துவமனை யில் இருப்பதில்லை. ஆகவே, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை, ராமநாதபுரம் , தேனி அரசு மருத்துவமனை களில் 4 டி எகோ கார்டோகிராபி (4D echo cartography) உபகரண வசதியை ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் இருதய அறுவை சிகிச்சை செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாரா யண பிரசாத் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக சுகா தாரத்துறை செயலர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையின் முதல்வர் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.