தேனி, மார்ச் 18- ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 அன்று சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுவதை விளக்கி தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு மின் வாரிய தொழிற்சங்கங்க ளின் கூட்டுக்குழு சார்பில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. மின்வாரிய தொழிலாளர் சம்மேளன செயலாளர் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். எம்ப்ளாயீஸ் பெடரேசன் சங்க தலைவர் மூக்கையா ,ஐக்கிய தொழிலா ளர் சங்க தலைவர் என்.சீனிவாசன், தேசிய தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செய லாளர் ஜெ.ரத்தினம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். சிஐடியு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் நிறைவுரை யாற்றினார். கூட்டத்தில் சிஐடியு தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் ,திட்ட செய லாளர் தேவராஜ் உள்ளிட்ட மின்வாரிய அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.