சின்னாளபட்டி, ஜுன் 11- 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஜெ.ஜெ.நகருக்கு அடிப்படை வசதி களை செய்து கொடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள்அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச் சித்துறை அமைச்சருமான ஐ.பெரிய சாமி ஆத்தூர் தொகுதி பொது மக்களி டமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பொதுமக்களுக்கு தீர்வு வழங்கினார். குறிப்பாக ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் பட்டா வழங்க கோரிக்கை விடுத்தல், கிராமங்களில் நாடகமேடை மற்றும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மனுக்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி கொடுத்து தீர்வு பெற்றனர். அப்போது ஒரு சில ஊராட்சிமன்ற தலைவர்கள், அதிமுக ஆட்சியின் போது அவர்களுக்கு சாதகமாக செயல் பட்ட அதிகாரிகள் தொடர்ந்து பொது மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக் கள் மீது எந்த நடவடிக்கை எடுப்ப தில்லை என புகார் தெரிவித்தனர். அப் போது அவர்கள் மத்தியில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, அரசு அதிகாரிகள் தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை முறை யாக பாகுபாடு இன்றி செயல்படுத்த வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செயல்பட்டதுபோல் அரசு அதி காரிகள் அரசுப் பணியில் அரசியல் செய்ய நினைத்தால் ஒருபோதும் விட மாட்டோம். ஆத்தூர் தொகுதியில் அர சியல் செய்ய நினைக்கும் அதிகாரி களுக்கு இடமில்லை என்றார்.
அப்போது ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சி ஜெ.ஜெ.நகர் நெசவாளர் காலனியைச் சேர்ந்த பொது மக்கள், தங்கள் பகுதியில் பத்து வரு டங்களாக சாலைவசதி, குடிதண்ணீர் வசதி, தெருவிளக்கு வசதி செய்து கொடுக்குமாறு பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட அமைச்சர் ஐ,பெரியசாமி, நெசவாளர் காலனி பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறை வேற்ற வேண்டுமென உத்தரவிட்டார். ஆத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன் பெறும் வகையில் நலத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி யளித்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் தனக்கு மின்மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனம் வேண்டுமென கோரிக்கை விடுத்தவுடன் உடனடியாக அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுத்தார்.இத னால் மாற்றுதிறனாளி மகிழ்ச்சியுடன் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்தார்.