districts

img

அதிமுக வசமிருந்த கடமலை- மயிலை ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது

கடமலைக்குண்டு, செப்.6- தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்  ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக, அதிமுக தலா 7 இடங்க ளில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிந்த சில மாதங்களில் தி.மு.க 8 ஆவது வார்டு கவுன்சிலர் அதிமுகவில் இணைந்தார். இத னையடுத்து அ.தி.மு.க வை சேர்ந்த சேர்ந்த  சந்திராசந்தோசம் கடமலை-மயிலை ஒன்றி யக்குழுத் தலைவராக பதவியேற்றார்.  2021 ஆம் ஆண்டு தி.மு.க அரசு பொறுப்  பேற்ற பின்னர் கடமலை-மயிலை ஒன்றிய  அ.தி.மு.க கவுன்சிலர்கள் 4 பேர் அடுத்த டுத்து தி.மு.கவில் இணைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க ஒன்றி யக்குழுத் தலைவர் மீது திமுக கவுன்சி லர்கள் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பினர். இது தொடர்பான கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்  பட்டது. இதில் ஒன்றியக்குழுத் தலைவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தமிழக  அரசு இவரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.  மேலும் கடமலை-மயிலை ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி காலியாக இருப்பதாக அரசு அறி வித்தது. இந்நிலையில் புதிய ஒன்றியக் குழுத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவல ராக தாமரைக்கண்ணன் செயல்பட்டார். ஏற்கனவே ஒன்றியக்குழுத் தலைவராக இருந்த சந்திராசந்தோசத்தை தவிர 13 ஒன்  றிய கவுன்சிலர்கள் தேர்தலில் கலந்து கொண்டனர். இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த 14வது வார்டு கவுன்சிலர் சித்ரா சுரேஷ் என்பவர் மட்டும் தலைவர் பதவிக்கு  வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை.

இதனால் சித்ராசுரேஷ் போட்டி யின்றி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்டார்.  இதனையடுத்து தலைவராக தேர்வு  செய்யப்டட்ட சித்ராசுரேசை ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைவர் இருக்கையில் அமர வைத்து சால்வை அணிவித்தார். அப்போது சந்தோசத்தில் ஆனந்த கண்ணீருடன் அழுதபடி சித்ரா சுரேஷ் பதவியேற்றுக்கொண்டார். அப்  போது திமுக கடமலை-மயிலை ஒன்றிய  செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, துணைச்செயலாளர் தேசிங்குராஜன் ஆகி யோர் ஒன்றியக்குழு தலைவருக்கு சால்வை அணிவித்தனர். பின்னர் நடைபெற்ற ஒன்றியக்குழு துணை தலைவருக்கான தேர்தலில் 3வது வார்டு கவுன்சிலர் சேகரன், 10 வது வார்டு கவுன்சிலர் ஆயுதவள்ளி மணிமாறன் ஆகி யோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் சேகரன் தேர்தல் அதிகாரியிடம் இருந்து வேட்பு மனுவை பிடுங்கி கிழித்து வீசினார். இதனையடுத்து சட்ட ஒழுங்கு  பாதுகாப்பை கருதி மறு தேதி அறிவிக்கா மல் ஒன்றிய குழு துணை தலைவருக்கான தேர்தலை தேர்தல் அலுவலர் ஒத்தி வைத்  தார். இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க வசமிருந்த கடமலை-மயிலை ஒன்றியம் தி.மு.க வசமானது. இதனை தி.மு.கவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ஆண்டிபட்டி போலீஸ் டி.எஸ்.பி ராமலிங்கம் தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

;