விருதுநகர், ஜூன் 17- விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரப்பகு திகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை யின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளையும் அத னால் ஏற்பட்ட பலன்களையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். சிவகாசி அருகே உள்ள வடபட்டியில் பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் கனி மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதையும், புதுக்கோட்டையில் கம்பு விதை பண்ணை மற்றும் சத்து தானியங்கள் (பயறு) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுழற் கலப்பை மூலம் பயன்பெறுவதையும் பார்வையிட்டார். இதையடுத்து, செவலூரில் தேக்கு மரக்கன்று களையும், பட்டு வளர்ச்சி துறை பண்ணை, நடை யனேரியில் கோவில்பட்டி-4 ரக சோளம் பயிரி டப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார். விவசாயிகளுடன் கலந்துரையாடி, பயிர் வளர்ப்பு முறைகள், அரசின் மூலம் வழங்கப்படும் உதவிகள், மகசூல் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குனர் சுமதி, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தர வள்ளி உட்பட பலர் உடனிருந்தனர்.