மதுரை, ஜூலை 11- மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமை யில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களி டம் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தின் கீழ் இலவச அறுவை சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து கலை பண்பாட்டு துறை சார்பாக நடத்தப் பட்ட கிராமிய கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு தொகை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை சார்பாக தேசிய மீன் வளர்போர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளையும் ஆட்சியர் வழங்கி னார் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சக்திவேல் உடனி ருந்தார்.