மதுரை, மார்ச் 10- மதுரை ஆழ்வார்புரத்தில் சித் திரை திருவிழா முன்னேற்பாட்டு பணி கள், ஓபுளா படித்துறை உயர்மட்ட பாலம் மற்றும் மாநகராட்சி நீச்சல் குளம் அருகில் மாணவர் படிப்பகம் கட்டுமானப் பணிகளை மேயர் வ. இந்திராணி, துணை மேயர் டி. நாக ராஜன், ஆணையாளர் மரு.கா.ப. கார்த்திகேயன் ஆகியோர் மார்ச் 10 வியாழனன்று ஆய்வு மேற்கொண் டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்பு நடவ டிக்கையால் சித்திரை திருவிழா நடை பெறாமல் இருந்து வந்தது. தற்போது இந்த ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. கள்ள ழகர் வைகை ஆற்றில் எழுந்தரு ளும் நிகழ்ச்சி ஏப்ரல் 16 அன்று ஆழ் வார்புரம் பகுதியில் நடைபெறுகிறது. இதற்காக மதுரை மாநகராட்சியின் சார்பில் நிரந்தர சறுக்கு பாலம் ஏற்க னவே அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சித்திரை திருவிழா தொடர் பான சாலை வசதி, குடிநீர் வசதி. நட மாடும் கழிப்பிட வசதி, சுகாதாரம், மின்விளக்குகள் வசதிகள் ஏற்படுத்து தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து மேயர், ஆணையாளர், துணை மேயர் ஆகி யோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஓபுளாபடித்துறை பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலத் தினை ரூ .23 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப்பாலமாக மாற்றிய மைக்கும் பணிகளை பார்வையிட்ட னர். மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் அருகில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களின் வசதிக் காக படிப்பகம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட னர். இந்த ஆய்வில் நகரப்பொறியா ளர் அரசு, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறி யாளர் சேகர், மக்கள் தொடர்பு அலு வலர் மகேஸ்வரன், உதவிப்பொறி யாளர்கள் தியாகராஜன். சந்தானம், சுகாதார அலுவலர்கள் வீரன், ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினர் லோகமணி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.