கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வடக்கு முதலாம் பகுதிக்குழுக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாகூர் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு க.திலகர் தலைமை வகித்தார். பகுதிக்குழுச் செயலாளர் வி.கோட்டைச்சாமி மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், பா.பழனியம்மாள் ஆகியோர் பேசினர்.