districts

img

உயர்மின் கோபுரத்தால் விவசாயம் பாதிப்பு: நட்ட ஈடுவழங்கக் கோரி போராட்டம்

திருவண்ணாமலை,மார்ச்.16- உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கக் கோரி ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அதனை சுற்றியுள்ள பகுதி களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வரு கின்றனர். விவசாயிகளின் விளை நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் வட்டாரச் செயலாளர் என்.குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் டி.கே.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் பி.பெரு மாள், சிபிஎம் நிர்வாகிகள் ரமேன்பாபு, ப.செல்வன், சி.அப்பாசாமி, பெ.கண்ணன், மாரிமுத்து, பால சுந்தரம், விஜயன், சாம்பசிவம், வெங்கடேசன், உயர்மின் கோபுர இயக்க நிர்வாகிகள் அடையபுலம் குமார், அஞ்சலா, கே.ரவி, பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு ஆணை 54 /2020-யின்படி உயர் மின் கோபுரம்  அமைந்துள்ள பகுதியில் உள்ள  விளை நிலங்களுக்கு விவசாயிகளுக்கு சந்தை மதிப்பை விட 10 மடங்கு  உயர்த்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.