districts

img

ஓட்டை உடைசல் அரசு பேருந்துகளை சீர் செய்து இயக்க கேட்டு சிபிஎம் போராட்டம்

அருமனை, டிச.2 - கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள்   மிகவும் மோசமான நிலை யில் ஓட்டை உடைசலாக மக்கள் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை யில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் பல விபத்துக்கள் நடந்துள் ளது. இந்த பேருந்துகளை சீரமைத்து  மக்கள் பயன்படுத்தும் முறையில்  இயக்க கேட்டும்,பல வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க கேட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டம் தழுவிய போராட்டம் நடத்தியது.  இதன் ஒரு பகுதியாக அருமனை, களியல், மேல்புறம் ஆகிய வட்டார குழுவின் சார்பாக அருமனை குஞ்சாலுவிளை சந்திப்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநில குழு உறுப்பினருமான ஆர்.லீமாறோஸ் தலைமை தாங்கி னார். வட்டாரச் செயலாளர்கள் பி.சசி குமார், ஆர்..ஜெயராஜ், சி. சசிகுமார்.  மாவட்டக் குழு  உறுப்பினர் ஹச். இராஜதாஸ், அருமனை பேரூராட்சி தலைவர் வி.எம். லெதிகாமேரி மற்றும் கவுன்சிலர்கள்உட்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.