districts

img

செட்டியார்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், டிச.14-  இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் செட்டி யார்பட்டி பேரூராட்சியில் வசிக்கின்ற மக்களுக்கு  3  தினங்களுக்கு ஒரு குடி தண்ணீர் வழங்க வேண்டும். தெருவிளக்குகளை சரி செய்திடவும் சுகாதாரச் சீர்கேடுகளை சரிசெய்யவும்  கூடுதல் துப்புரவு பணியா ளர்களை நியமிக்க வேண்  டும் என்பன உள்ளிட்ட பல் வேறு அடிப்படை வசதிகள் கோரி புதன்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ். ராஜ் தலைமை வகித்தார்.  மாநிலச் செயற்குழு உறுப்பி னர் எஸ்.கண்ணன் சிறப்பு ரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.இராமர், ஒன்றிய செயலாளர் எஸ். சந்தனகுமார் ஒன்றியக் குழு உறுப்பினர் சி.பரமேஸ்வ ரன், மூத்த தோழர் டி. நீராத்தி லிங்கம் ஆகியோர் பேசினர்.