districts

img

பனச்சமூட்டில் காவல்துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அருமனை, டிச.20- கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாங்கோடு ஊராட்சி தலைவர் ற்றி. எஸ்.ராஜன் ஆர்.எஸ்.எஸ்.குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும் அதற்கு துணை போகும் அருமனை காவல்துறையை கண்டித்தும் ஞாயிறன்று (டிச.19) மாலை பனச்சமூடு சந்திப்பில் சிபிஎம் களியல் வட்டாரச் செயலாளர் பி.சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் எச். இராஜதாஸ், அருமனை வட்டார செயலாளர் சி.சசிகுமார் ஆகியோர் பேசினர்.

;