districts

img

காளையார்கோவிலில் பட்டியலின கல்லூரி மாணவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரத் தாக்குதல்

சிவகங்கை, ஏப்.20-   சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் தாலுகா விட்டனேரி  கிராமத்தைச் சேர்ந்தவர் முரு கேசன் மகன் ராகுல் சாங்கிருத்தியா யன். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு  படித்து வருகிறார். இந்த மாண வரை கட்டி வைத்து அடித்து  கொடு மைப்படுத்தியச் செயலுக்கு வன்  மையான கண்டனத்தை தெரி வித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி, மாணவரை தாக்கிய  அனை வரையும் கைது செய்ய வேண்டும்  என்று வலியுறுத்தி முதலமைச்ச ருக்கு மனு அனுப்பியுள்ளது.  இது தொடர்பாக  முதலமைச்ச ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தண்டியப்பன் அனுப்பிய மனுவில்  கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவில் வட்டம் விட்டனேரி  கிராமத்தைச் சேர்ந்த பட்டியலி னத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராகுல்  சாங்கிருதியாயன் (வயது 24). இவர் திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் இள நிலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-4-2023 புதன்  கிழமை இரவு 7 மணி அளவில் குரு வாடிப்பட்டியில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு இருசக்கர வாக னத்தில் முத்தூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப் போது விட்டனேரியைச் சேர்ந்த டாஸ்மாக் பாரில் வேலை செய்யும் வீரகாளை மகன் விக்கி என்ற  விக்னேஷ், ராகுல சாங்கிருத்தியா யனை வழிமறித்து, சாதியைச் சொல்லி அசிங்கமாக பேசி சண்டை  போட்டுள்ளார். இதனால் பயந்து  போன ராகுல்  சண்டையை தவிர்க் கும் நோக்கத்தில் அங்கிருந்து  கிளம்ப முயன்றுள்ளார்.அப் போது மீண்டும் வழிமறித்து தனது நண்  பர்களான விட்டனேரி கருவா என்ற பிரபாகரனை போனில் அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் அசிங்கமாக திட்டியும் இரும்பு ராடால் ராகுலின் தலையிலும் கை யிலும் தாக்கி, சட்டையை கிழித்த னர். ராகுல் மயக்கமான நிலையில் வலுக் கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் நடுவில் அமர்த்தி கொண்டுசென்று, விட்டனேரியில்  குடிநீர் ஊரணி அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களுக்கு போன்  செய்து வரவழைத்து இரும்புராடு, இரும்புச் செயின் மற்றும் கம்பி  கொண்டு சரமாரியாக தாக்கியுள்ள னர்.  கொலை செய்யும் நோக்கத்  தோடு ரத்தக்காயம் ஏற்படுத்தி யுள்ளனர்.

வலி தாங்க முடியாமல்  ராகுல்  கதறிய சத்தம் கேட்டு அக்கம் பக்  கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து விலக்கிவிட்டு,  ராகுலை மீட்டு,  108 ஆம்புலன்ஸ் மூலம் சிவ கங்கை அரசு மருத்துவமனையில் 12 .04.2023 இரவு சேர்த்துள்ளனர். அதன் பின்பு மருத்துவமனையில் ராகுல் வாக்குமூலத்தின் அடிப் படையில் காவல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் விக்னேஷ்,தினேஷ் மற்றும் கருவா என்ற பிரபாகரன் மற்றும் அடையாளம் தெரிந்த இரு  நபர்கள் மீது வழக்கு பதிவு செய்  யப்பட்டுள்ளது. அதன் பின்னர் விசாரணை செய்ததில் பெரிய கண்ணணனூரைச் சேர்ந்த கொல்  லங்குடியில் ஹோட்டல் வைத்தி ருக்கும் அக்னிசாமி மகன் பிரபு  மற்றும் கொல்லங்குடி அழகர்சாமி  நகரில் வசிக்கும் தண்டபாணி மகன்  மணி என்பவரும் இந்தகொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டுள்ள னர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. குற்ற வாளிகள் அக்னிசாமி மகன் பிரபு,  தண்டபாணி மகன் மணி ஆகியோர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட வில்லை. மேலும் பிரபு ,மணி ஆகி யோர் வழக்கை வாபஸ் பெறா விட்டால் ராகுலை கொலை செய் வோம் என மிரட்டி வருகின்றனர்.  ராகுலை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற ராகுலை மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்  டச் செயலாளர் தண்டியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி ,மாவட்டக்குழு உறுப்பினர் மெய்யப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர்  வீரையா ஆகியோர் நேரில் சந் தித்து, ஆறுதல் கூறினர்.