மதுரை, ஜூன் 15- மதுரை மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட 20 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நகர்ப்புறத் திற்கு 10 உறுப்பினர்களும் கிராமப்புறத்திற்கு 8 இடங்க ளுக்கு 10 பேர் மனு செய்தி ருந்தனர். இந்நிலையில் நகர் பகு திக்கு போட்டியிட்ட 10 பேர் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டு, அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து மாவட்ட வருவாய் துறை அலுவலர் சக்திவேல் ஜூன் 14 புதனன்று வெற்றி பெற்ற வர்களுக்கான சான்றிதழை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை மாநகர் 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் வெற்றி பெற்ற தற்கான சான்றிதழை பெற் றுக்கொண்டார் உடன் மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், வடக்கு - 1ஆம் பகுதிக்குழு செயலாளர் வி.கோட்டை சாமி, மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆ.பாலமுருகன், நிர்வாகி ஜோதிபாசு மற்றும் தேர்வு செய்யப்பட்ட உறுப் பினர்கள் உடனிருந்தனர். திட்டக்குழு உறுப்பின ராக தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர் குமர வேலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர், இரா.விஜயராஜன், துணை மேயர் டி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா.நரசிம்மன், ஏ. ரமேஷ், வடக்கு-2 பகுதிக் குழு செயலாளர் ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.ராதா, என்.ஜெயச் சந்திரன், கே.அலாவுதீன் மற் றும் பலர் கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.