districts

img

அப்பளம், கட்டுமான மூலப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துக!

மதுரை, ஜன.6-  அப்பளத் தொழிலாளர், கட்டு மான தொழிலாளர் சங்கங்கள் சார்பில் அப்பள மூல பொருட்கள் விலை உயர்வை கைவிடக் கோரி தெருமுனை பிரச்சார கூட்டம் புதனன்று மதுரை ஜெய்ஹிந்து புரம் ஜீவாநகர் சந்திப்பில் நடை பெற்றது. இதற்கு, அப்பள தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் எம். பாலமுருகன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்டச் செயலா ளர் இரா.தெய்வராஜ், காட்டு மான தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சி.சுப்பையா ஆகி யோர் சிறப்புறையாற்றினர். ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன் மாவட் டச் செயலாளர் எம்.சிவபெரு மாள், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ. ராஜேந்திரன் ஆகியோர் விளக்கி பேசினர். இதில், சங்க பகுதி நிர்வா கிகள் எம்.கரிகாலன், ஏ.குருசாமி, எம்.முருகன், டி.கதிரேசன், எஸ். ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதில், அப்பளத் தொழிலா ளர், கட்டுமான தொழிலாளர் சங்கங்கள் சார்பில் அப்பள மூல பொருட்கள் விலை உயர்வை கை விட வேண்டும். தொழிலாளர்கள் கூலி உயர்வுக்கான பேச்சு வார்த் தையை துவங்கிட வேண்டும். கொரோனா கால நிவாரண நிதி வழங்கிட வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண் டும். கட்டுமான மூலப்பொருள் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும். ரூ.3 ஆயி ரம் பென்சன் வழங்கிட வேண்டும். கல்வி உதவி, திருமண உதவி, விபத்து உதவி, நலவாரிய அட்டையுள்ள அனைவருக்கும் வழங்கிட வேண்டும், பணியை துரிதப்படுத்து வேண்டும். சிறு - குறு நடுத்தர தொழில்களையும், தொழிலாளர் நலன்களையும் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.