கடமலைக்குண்டு, மார்ச் 9- தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் அரசரடி, இந்திராநகர், காந்திகிராமம், பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. தற்போது இலவம்பஞ்சு சீசன் தொடங்கியுள்ளது. பொது மக்களின் முக்கிய வருவாயாக இலவம் பஞ்சு உள்ள நிலையில் அதனை மரங்களில் இருந்து பறித்து ஏற்றுமதி செய்ய வனத் துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதனால் இல வம் பஞ்சு மூலம் கிடைக்கும் வரு வாய் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை யில் கடந்த சில நாட்களுக்கு முழு மையான தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த மலைக்கிராம பொதுமக்கள் முடிவு செய்தனர். புதன்கிழமை காலை போராட்டத்திற்கு வந்த மக்களை போலீசார் குமணன் தொழு, வருசநாடு ஆகிய பகுதி களில் மறித்து திருப்பி அனுப்பி னர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீ சார் கடமலைக்குண்டு புதிய பேருந்து நிலையம் அருகே பாது காப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் 300க்கும் மேற்பட்ட மலைக்கிராம பொதுமக்கள் மாற்று பாதைகள் வழியாக கடமலைக்குண்டுவிற்கு வந்த னர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நீதிமன்ற தீர்ப்பு மலைக்கிராம பொதுமக்களுக்கு எதிராக வரும் பட்சத்தில் தமிழக அரசு முன் னின்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார கூட்டத் தின் போது தமிழக முதல்வர் உறுதியளித்தபடி மேகமலை, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊரா ட்சிகளை சேர்ந்த வன விவசாயி களுக்கு பட்டா வழங்க வேண்டும். நீதிமன்ற வழக்கு முடியும் வரை மலைக்கிராம பொதுமக்கள் வழக்கமான விவசாய பணிகளில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையின் போது பெண்கள் சிலர் பேருந்து நிலை யம் முன்பு அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட தொடங்கினர். இத னையடுத்து போலீசார் போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 115 பேரை கைது செய்தனர்.