சிவகங்கை, ஏப்.21- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 50 ஆண்டுக ளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் குடி யிருப்புகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சியரி டம் குறை தீர்க்கும் நாளில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருப்பு சாமி, தாலுகா செயலாளர் அழ கர்சாமி ஆகியோர் மாவட்ட ஆட்சி யர் மதுசூதனன் ரெட்டியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி நகரில் அழகப்பா புரம், பாரதிநகர், வள்ளலார் நகர், சாமியார் தோட்டம் பின்புறம், முத்துராமலிங்கதேவர் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஏழை, எளிய மக்க ளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சிவகங்கை மாவட் டத்தில் விவசாய விளை நிலங்க ளில் வளர்க்கப்பட்டு வரும் ஆரஸ்பதி மரங்களை அகற்றி விட்டு, பயன்தரும் மரங்களை நட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.