districts

img

மழை நீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் தோல்வி

தூத்துக்குடி,டிச.1 தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற  மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக கட்சியின் புறநகர் குழு செயலாளர்  பா. ராஜா மாநகராட்சி ஆணைய ருக்கு அனுப்பியுள்ள மனு:  தூத்துக்குடி மாநகராட்சி 53வது வார்டு முனியசாமி கோயில் தெரு, முஸ்லீம் தெரு, 59வது வார்டு சூசைநகர் ஆகிய  குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர், கழிவுநீர் இதுவரை வெளியேற்றபடவில்லை. மாநக ராட்சி அதிகாரிகள் தேவையான மோட்டர்க ளை தெற்கு மண்டல பகுதிகளுக்கு மக்கள் நலன் பெறும் வகையில் ஆங்காங்கே நிறுவி மழை நீரை வெளியேற்றும் வேலையில் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். மாநகராட்சி தெற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மழை நீர், கழிவு நீரை வெளியேற்றும் வேலையை துரிதமாக நடத்துவதற்கு மேற்படி சுகாதார ஆய்வாளர் தகுதியானவரா என்று மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை செய்திட வேண்டும்.

மேலும் ஒரு வார காலம் ஆகியும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. மழை வரும் என்று தெரிந்திருந்தும் தேவையான ஏற்பாடுகளை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஊழியர்கள் பற்றாக்குறை, மோட்டார் பற்றாக்குறை, வாகனங்கள் பற்றாக்குறை என அனைத்திலும் பற்றாக் குறையாக இந்த தெற்கு மண்டல நிர்வாகம் செயல்படுகிறது. மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்த நிலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை சொல்வதற்கு அதிகாரிக ளை அழைத்தால் சுகாதார ஆய்வாளர் எந்த பதிலும் கூறுவது இல்லை. அழைப்புகளை துண்டிப்பதில் மட்டும் கவனமாக இருக்கிறார். அலட்சியமாக செயல்படும் சுகாதார ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பகுதி மக்க ளின் நலனில் அக்கறையோடு செயல்படும் நல்ல அதிகாரியை தெற்கு மண்டல பகுதிக்கு சுகாதார ஆய்வாளராக நியமிக்க வேண்டும். மேலும் மழை நீர் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிட வேண்டும் எனவும் மழை நீர் கழிவு நீரை உடனடியாக வெளியேற்றிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.