சிவகங்கை, ஜூன் 30- காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் காரைக்குடி கிளைத் தலைவர் குணசேகர னுக்கு பணிநிறைவு பாராட்டு விழா காரைக் குடி எல்ஐசி அலுவலகத்தில் நடை பெற்றது. எல்ஐசியில் 40ஆண்டு காலம் பணி யாற்றியவர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் காரைக்குடி கிளைத் தலை வராக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் குணசேகரன். அவருக்கான பாராட்டு விழாவிற்கு கிளைச் செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். கிளை இணைச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு முன்னாள் பொதுச் செயலா ளர் சு.சுவாமிநாதன், மதுரை கோட்ட பொதுச்செயலாளர் ரமேஷ்கண்ணன், மூத்த தோழர் சித்திரவேலு, மதுரை கோட்ட முன்னாள் தலைவர் மீனாட்சுந்தரம்,எல்ஐசி பென்சனர் சங்கத்தின் சங்கரேஸ்வரன், அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலா ளர் ஜீவானந்தம், சிஐடியு மாவட்ட தலை வர் வீரையா, சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் ஆயோர் வாழ்த்திப் பேசினர்.