districts

img

காட்டு விலங்குகளை தடுக்க அகழி, வேலி அமைக்கக் கோரி வனத்துறை அலுவலகம் முற்றுகை

சின்னாளபட்டி, ஏப்.16-  திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைப்பட்டி, சிறி யன்காடு, ஆடலூர், பன்றிமலை ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர் இவர்களில் பெரும் பாலானோரின் வாழ்வாதாரமே கூலி வேலை தான். ஒரு சிலர் தோட்டங்களில் தென்னை, வாழை மரங்கள், ஆமணக்கு நட்டு விவசாயம் செய்து வரு கின்றனர் தோட்டங்களில் யானை, காட்டுப்பன்றி நடமாட்டத்தால் விவசாய பயிர்கள் மட்டுமல் லாது வீடுகளும் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளன. இது குறித்து வனத்துறையின ரிடமும் ஆடலூர் பன்றிமலை ஊராட்சி நிர்வாகத்திடமும் கூறினால் கண்டுகொள்வதில்லை. வனத்துறையினர் ‘யானை வரும் இடத்தில் ஏன் இருக்கிறீர்கள்? காலிப் பண்ணிப் போங்கள் என்று சொல்கிறார்கள் .நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்கிறோம் என்று மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னிவாடி வனச்சரகத்தில் வேட்டைத் தடுப் புக்காவலராக பணியாற்றும் குய் யவ நாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தரம் டி. பண்ணைப் பட்டி கோம்பையில் காவல் காத்துக் கொண்டு இருந்த போது யானை மிதித்து உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும் விவசாயத் தொழிலாளர் சங்கமும் இணைந்து வனத்துறை அலு வலகத்தில் குடியேறும் போராட்  டம் நடத்துவதாக சுவரொட்டி களை ஒட்டியுள்ளன.இதனால் வனத்துறை அலுவலகத்தைப் பூட்டி விட்டு அதிகாரிகள் சென்ற தால் ஏப்ரல் 16 சனிக்கிழமையன்று வனத்துறை அலுவலகத்தின் வெளியே அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.  காட்டு யானைத் தாக்கி பலி யான வேட்டைத் தடுப்புக்காவ லர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி  இழப்பீடு வழங்க கோரியும் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி களில் வாழும்  பொது மக்களை காட்டு யானை களிடமிருந்து காப்பாற்ற கோரி யும் வேட்டைத் தடுப்புக்காவ லர்களை அதிகப்படுத்தக்கோரி யும் சோலார் வேலி தரமாக அமைத்து தரக் கோரியும் முழக்  கங்கள் எழுப்பினர்.

போராட்டச் செய்தி அறிந்து வந்த வனச்சரகர் சக்திவேல், கோரிக்கைகளை மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்றும் உடனடியாக நானே சம்பவ இடத்  திற்குச் சென்று ஆராய உள்  ளேன் என்று உறுதியளித்தார். இதனால் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது இப்போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் என்.பெருமாள் ,சிபிஎம் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செய லாளர் கே.எஸ்.சக்திவேல் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில். வேட்டைத் தடுப்புக்காவலர் குடும்பத்திற்கு உடனடியாக நஷ்ட ஈடு 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். காட்டு யானைகளிடமிருந்து இருந்து மக்களை காப்பாற்ற அகழி அமைக்க வேண்டும். வேலி போட  வேண்டும். கண் கூசும் அளவிற்கு மின் சார விளக்குகள் பொருத்த வேண்டும். வேட்டைத் தடுப்பு காவலர்களை அதிகப்படுத்த வேண்டும். இவைகள் அனைத் தும் உடனே நிறைவேற்றத் தவறினால் ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாயிகளைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று தெரி வித்துள்ளனர். இப்போராட்டத் தில் சங்கத்தின் ஒன்றிய தலை வர் தங்கசாமி. ஒன்றிய செயலா ளர் தயாளன். சிபிஎம் ஜெயக் குமார் ஹக்கிம், ஆறுமுகம், பரம சிவம் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.         (ந.நி)