விருதுநகர், ஜூலை 24- தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. அதில், விருதுநகர் மாவட்டத் தில் மொத்தமுள்ள 237 தேர்வு மையங்களில் இத் தேர்வா னது நடைபெற்றது. இத்தேர்வு எழுதுவதற்கு 81 ஆயி ரத்து 44 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 69ஆயிரத்து 490 பேர் (85.74 சதவிகிதம்) மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வில் 11,554 (14.26 சதவிகிதம்) பேர் தேர்வு எழுத வரவில்லை. சாத்தூரில் உள்ள தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி பார்வையிட்டார். மேலும், 309 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 52 மொபைல் பார்டிகள், துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவ லர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்ட னர். 237 தேர்வு மையங்களும் 317 கேமிராக்கள் மூலம் கண்காணித்து பதிவு செய்யப்பட்டன.