districts

மதுரை முக்கிய செய்திகள்

ஆதிதிராவிடர் -பழங்குடியின  மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

மதுரை, ஜூன் 10-  மதுரை மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் இன மாணாக்கர் அரசு விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சொ.சங்கீதா தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டத்தில் 2023-2024-ஆம் கல்வி யாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவ,  மாணவியர்கள் விடுதியில் தங்கி பயில ஏதுவாக விடுதி  மேலாண்மை அமைப்பு (Hostel Management System)  என்ற செயலியின் மூலம் https://tnadw-hms.in இணைய  வழியில் மாணாக்கர்களின் சேர்க்கை நடைபெறவுள்ள தால் மாணாக்கர்கள் தங்கள் விண்ணப்பங்களை 07.06.2023  முதல் 30.06.2023 வரையில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்  கொள்ளப்படுகிறது.   பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.  தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் விடுதி சேர்க் கைக்கு அனுமதிக்கப்படமாட்டாது. விடுதியில் தங்கி பயில  விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன  மாணவ, மாணவியர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்  படுத்தி விடுதியில் சேர்ந்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

நுகர்பொருள் வாணிப கழக  கிட்டங்கிகளில் திடீர் ஆய்வு

தேனி, ஜூன் 10- தேனி மாவட்டத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக  கிட்டங்கிகளில் மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்க  துறை காவல் கண்காணிப்பாளர் சினேகப்ரியா உத்தரவின்  பெயரில் மதுரை உட்கோட்டம் குடிமை பொருள் வழங்கல்  குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படி உத்தமபாளையம் குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல் ஆய்வா ளர் சுப்புலட்சுமி மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்ற  புலனாய்வுத்துறை போலீசார் தேனி மாவட்டத்தில் உள்ள  நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பொருட்களின் இருப்பு மற்றும் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ரேசன் பொருட்களை முறையாக கையாள அறிவுரை வழங்கப்பட்டது. விதி களை மீறும் பணியாளர்கள் மீது துறை ரீதியான சட்ட நட வடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்ச ரித்துள்ளனர்.

வேன் மீது பைக் மோதி வாலிபர் பலி

கடமலைக்குண்டு, ஜூன் 10- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே மூலக் கடை கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 28). டிரைவ ராக வேலை செய்து வந்தார். நேற்று பிரசாந்த் மயிலாடும் பாறையில் இருந்து மூலக்கடைக்கு மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். மூலக்கடை அருகே சுக்கான் ஓடை பாலத்தை கடக்கும் போது மோட்டார் சைக்கிள் நிலை  தடுமாறி எதிரே மயிலாடும்பாறை நோக்கி வந்த தனியார்  மில் வேன் மீது மோதியது.  இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரசாந்த்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால் செல்லும் வழியில் பிரசாந்த் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

நிலக்கோட்டை அருகே வரதட்சணைக் கொடுமை 3 பேர் மீது வழக்கு

சின்னாளப்பட்டி, ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே செக்கா பட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (23) இவருக்கும் மதுரை  மாவட்டம் வாடிப்பட்டி அருகே சங்கரபட்டியைச் சேர்ந்த வீர பாண்டி (26) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடைபெற்றது.  இந்நிலையில் 10 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாயும்  வரதட்சணையாக வாங்கி வருமாறு கூறி பஞ்சவர்ணத்தை  அவரது தந்தை வீட்டிற்கு விரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சவர்ணம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி, அவ ரது தாயார் ராமுத்தாய், வீரபாண்டி தங்கை கோகிலா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

சிப்காட்டில் தொழிலாளி மர்மச்சாவு

சின்னாளப்பட்டி, ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை அடுத்துள்ள பள்ளபட்டி சிப்காட் பகுதியிலுள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தவர் கதிர்வேல்(40) .இவர்  வெள்ளியன்று மதியம் தனது சொந்த ஊரான பேரையூ ருக்கு செல்வதாக கூறிச்சென்றார் .ஆனால்கதிர்வேல் சனிக்கிழமையன்று சிப்காட் அருகே உள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.  இது குறித்து அப்பகுதியினர் தெரிவித்த தகவலின்  அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் கதிர்வேலின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

நிலத்தை விற்பதாக கூறி பணமோசடி தம்பதி மீது வழக்குபதிவு

சின்னாளப்பட்டி, ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சீரகம் பட்டி யைச் சேர்ந்தவர் பாலமுருகன் (52) .இவர் திண்டுக்கல்லில் நாகல்நகர்  பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவரிடம் வத்தலக்குண்டு அருகே வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த முருகேஸ்வரி, அவரது கணவர் ஜெகதீசன் ஆகிய 2 பேரும் நிலக்கோட்டையில் ஒரு இடத்தை விற்பதாக கூறி கடந்த 2014 ஆம் ஆண்டு 3 லட்சத்து 25 ஆயிரம் பணம் வாங்கினர். ஆனால் நிலத்தை விற்காமலும் பணத்தை கொடுக்காமலும் கால தாமதம் செய்து வந்ததைத் தொடர்ந்து பாலமுருகன் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இதனை விசாரித்த நீதிமன்றம் முருகேஸ்வரி, ஜெகதீசன் 2 பேர்  மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க நிலக்கோட்டை காவல்துறையின ருக்கு உத்தரவிடப்பட்டது.

குப்பைகளை பிரித்து வழங்குபவர்களுக்கு  போடி நகராட்சி பரிசு திட்டம் அறிவிப்பு

தேனி, ஜூன் 10- போடி நகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்கு பவர்களுக்கு பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்டம், போடி நகராட்சி பகுதியில் தூய்மை  நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கத்தின் இரண்டா மாண்டு தொடக்கவிழா போடி நகர்மன்ற தலைவர் ராஜ ராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் அ.கிருஷ்ணவேணி, நகராட்சி ஆணை யாளர் (பொ) இ.செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  போடி 21 ஆவது வார்டு பகுதியில் குப்பைகளை பிரித்து  வழங்கிட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குப்பைகளை  பிரித்து வழங்க பரிசு அட்டை திட்டமும் தொடங்கி வைக்கப்  பட்டது. வீடுகளில் உருவாகும் மக்கும் குப்பை கழிவுகளி லிருந்து வீட்டிலேயே உரமாக்குவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.  நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், முரு கேசன், மகேஸ்வரன், கஸ்தூரி, சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், கணேசன், சுரேஷ்குமார் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இ-சேவை மையம் திட்டத்தில்  பயன்பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூன் 10- சிவகங்கை மாவட்டம் “அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டத்தில்” பயன்  பெற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, “அனை வருக்கும் இ.சேவை மையம்” திட்டம் மூலம் தற்போது அனைத்து குடிமக்களும் இ.சேவை மையங்கள் தொடங்கி  பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை  அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே பெறு வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் இ.சேவை வலைத்  தளத்திலிருந்து https://www.tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ இணைய வழி சேவை களை மக்களுக்கு வழங்கும் “அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் இத்திட்டத்தில்” பயன்பெற விண்ணப்பதாரர்கள்; 30.06.2023 அன்று இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ.சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக்  கட்டணம் ரூ.3,000 ஆகும் மற்றும் நகரப்புறத்திற்கான கட்டணம் ரூ.6,000 ஆகும். இவ்விண்ணப்பக் கட்டணத்தை இணைய பரிவர்த்தனை முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.  மேலும், அருகிலுள்ள இ.சேவை மையங்களின் தக வல்களை “முகவரி“ ஆண்ட்ராய்டு மொபைல் செயலி யைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://tnega.tn.gov.in/ இணையதளத்தில் காணலாம் என மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு திருமணம்:  5 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஜூன் 10- விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே 12வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர்,  புது மாப்பிள்ளை உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே உள்ளது சேத்தூர். இங்குள்ள மேட்டுப்பட்டி, மொட்மலை அருகே 12 வயது சிறு மிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக சைல்டு லைன்  அமைப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சமூக நலத்துறையைச் சேர்த்ந மகளிர்  ஊர் நல அலுவலர் கோவிந்தாம்மாள் அங்கு விசாரணை  மேற்கொண்டார். அதில், அந்த தகவல் உண்மையென தெரிய வந்தது. இதையடுத்து, அவர் இராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்  பேரில், 12 வயது சிறுமியை திருமணம் செய்த மாரிமுத்து,  அவரது பெற்றோர் பெரியசாமி-பேச்சியம்மாள், சிறுமி யின் பெற்றோர் பாலு, காளியம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ரூ.1.80 லட்சத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 6 பேர் கைது

விருதுநகர், ஜூன் 10- விருதுநகர் மாவட்ட தனிப் படை காவலர்கள் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். மத்தியசேனை பகுதியில் வந்த இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அதில்,  14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிய  வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக சுப்பிரமணியன், துரைப்பாண்டியன், பழனி வேல் ஆகியோரை கைது செய்தனர். வைத்தியலிங்கபுரம் அருகே வந்த காரை தடுத்து  நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 151கிலோ புகை யிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து, முனீஸ்வரன், சின்னராமர் ஆகியோரைக் கைது  செய்தனர். திருத்தங்கல் அருகே வந்த காரை வழிமறித்து சோத னையிட்டதில் 75 கிலோ குட்கா, பான்மசலா இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கார்த்திகேயன் என்ப வரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1,77, 822 ஆகும்.

திருவில்லிபுத்தூரில்  மக்கள் நீதிமன்றம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 10-  விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின்  தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான தில கம் தலைமையில் சட்டப்படியான மக்கள் நீதிமன்றம் திரு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடை பெற்றது. மேலும் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி,  சிவகாசி, சாத்தூர் . ராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள்  ஆணைக்குழு சார்பாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட வளாகங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில்  நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், மோட்டார் வாகன  விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வராக் கடன்கள் மற்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் நிலுவை யில் இருக்கும் வழக்குகள் உட்பட 936 வழக்குகள் பரிசீல னைக்கு எடுக்கப்பட்டன. அதில் சுமார் 93 வழக்குகளுக்கு  தீர்வு காணப்பட்டு ரூ.1,20,85,147 வழங்க உத்தரவிடப்பட்டது. 

சட்டமன்ற மனுக்கள் குழுவிற்கு மனுக்கள் வரவேற்கப்படுகின்றன

திண்டுக்கல், ஜூன் 10- திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் சட்ட மன்ற மனுக்கள் குழு ஆய்வுக்காக மனுக்கள் வரவேற்  கப்படுகின்றன. ஜுன்.20 ஆம் தேதிக்குள் சென்னை  சட்டப்பேரவை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற மனுக் கள் குழு விரைவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. திண்டுக்கல் மாவட்ட எல்லைக் குள் தீர்க்கப்பட வேண்டிய பொதுப் பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் பூங்கொடி கேட்டுக்கொண்டுள்ளார். மனு தாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டப்பேரவை, சென்னை  600 009 என்ற முகவரிக்கு 20.6.2023 ஆம் தேதிக்குள்  அனுப்பி வைக்க வேண்டும். அந்த மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா, மற்றும் அரசு இலவச உதவிகள் வேண்டு தல், வங்கிக்கடன் அல்லது தொழில் கடன் வேண்டு தல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலு வலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற  பொருளில் மனுக்கள் இருக்கக்கூடாது. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்ட மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்  கொள்ளப்படும். ஒரு மனுதாரர் பல மனுக்கள் அனுப்பி யிருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்  படும் மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்று ஆட்சியர் பூங்கொடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (நநி)