தூத்துக்குடி, டிச.25- தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்து மஸ் ஞாயிறன்று உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் விழா வை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனி மய மாதா பேராலயத்தில் நள்ளிரவில் 12மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதுபோல் தூத்துக்குடியில் திரு இருதய மேற்றிரா சன ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம், தூய பேதுரு தேவாலயம் உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனை நடத்தப்பட்டது. புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவா லயத்திற்கு வந்த கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர். பின்னர் ஒருவருக்கொரு வர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறி உற்சா கத்துடன் கொண்டாடினர். கேரல் பவனி தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேரல் பவனி நடைபெற்றது. வாகனங்களை வண்ண விளக்குகளாலும் அலங்கார கலைப்பொருட்களாலும் அலங்கரித்து துள்ளல் இசை ஒலிக்க இளைஞர்கள் இசைக்கேற்ப ஆடிப்பாடி நகரின் முக்கிய வீதிகள் வழி யாக வலம் வந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி னர். கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.