விருதுநகர், மே 21- 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19 அன்று அடுத்தடுத்து வெளியானது. இதில் விருதுநகர் மாவட் டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்களின் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்களை பெற் றுள்ளனர். சிபிஎம் விருதுநகர் நகர் செயலாளராக இருந்து வருபவர் எல்.முருகன். இவ ரது மகள் எம்.வெண்மணி பதி னோராம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்-97, ஆங்கி லம்-87, இயற்பியல்-91, வேதி யல்-90, தாவரவியல்-91, விலங்கியல்-95 என 600க்கு 551 மதிப்பெண்கள் பெற் றுள்ளார். இதேபோல், சிபிஎம் சிவ காசி நகர் செயலாளராக இருந்து வருபவர் ஆர்.சுரேஷ்குமார். இவரது மகன் எஸ்.ராம்சரவணன். இவர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர் வில் தமிழ்-95, ஆங்கிலம்-98, கணிதம்-84, அறிவியல் 96, சமூக அறிவியல் 94 என 500க்கு 467 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.