districts

img

கமுதி,சிவகங்கையில் குழந்தைகள் தின விழா

இராமநாதபுரம்,நவ.16- இராமநாதபுரம் மாவட்டம், கமுதி க்ஷத்திரிய நாடார் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின‌ விழா  நடைபெற்றது. ஆசிரியை காயத்ரி வர வேற்றார். மழலைச் செல்வங்களின் அழ கிய நடனத்துடன் விழா துவங்கியது.மாண வர்கள் குழந்தைகள் தின‌த்தைப்பற்றி உரை யாற்றினார். பி.காமராஜ் சிறப்புரை யாற்றினார். இதற்கு நடுவராக ஆசிரியை லீமா ரோசி பங்கேற்ற, மாணவர்கள் பட்டி மன்றம் நிகழ்த்தினர்.  இந்நிகழ்வில் பள்ளி நிர்வாகக்குழு வினைச் சார்ந்த தலைவர் ஆர்.வெங்க டேஷ் பாபு ,செயலர் ஆர். முத்துவிஜயன் , பொருளாளர் ஜி.எஸ். முத்துமுருகன், பள்ளி முதல்வர் டாக்டர் எம்.ஶ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்  பட்டன. ஆசிரியை நந்தினி நன்றி கூறினார். சிவகங்கை  சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி யில் யுனிசெப், சைல்டு லைன் இந்தியா அறக்கட்டளை, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு  நிறுவனம் மற்றும் சிவகங்கை சைல்டுலைன் சார்பில் குழந்தைகள் தின விழாவை குழந்தை கள் நண்பன் வார விழா மற்றும் வளர்ச் சிக்கான விளையாட்டு பிரச்சாரம் நடை பெற்றது. இவ்விழாவிற்கு மன்னர் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.சைல்டு லைன் இயக்குனர் ஜீவானந்தம், ஒருங்கி ணைப்பாளர் ரசீந்திரகுமார், ஐ.ஆர்.சி.டி.எஸ் குழந்தைகள் இல்ல நிர்வாகி இமய மடோனா, குடும்ப நல ஆலோசகர் ஜோதி  ஆகியோர் கருத்துரையாற்றினார். விளை யாட்டு போட்டிகள் நடந்தன. இதில் உடற்கல்வி இயக்குனர் அபுதாகிர், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் கலைச்செல்வி ஜெயலதா மற்றும் ஆசிரி யர்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர். பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.