districts

மதுரை முக்கிய செய்திகள்

ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள்  நடைபெறுவதை மாற்றுக! முதலமைச்சருக்கு வாலிபர் சங்கம் மனு

சிவகங்கை, ஆக.10- தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வு. டைப்ரைட்டிங் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும்  ஆகஸ்ட் 26 அன்று நடைபெறுகின்றன. இதனால் இரண்டு  தேர்வுகளை எழுதும் இளைஞர்கள் பாதிப்படைவார்கள்.எனவே வெவ்வேறு தேதிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் தமிழக முதல மைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.  அந்த மனுவில், காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வு.  டைப்ரைட்டிங் தேர்வை எழுத லட்சக்கணக்கான இளை ஞர்கள் தயாராகி வருகிறார்கள். தமிழக முதல்வர் உடனே  தலையிட்டு ஏதாவது ஒரு தேர்வை வேறு தேதிக்கு மாற்றி  அனைவரும் இரண்டு தேர்வுகள் எழுதும் வாய்ப்பை  ஏற்படுத்தித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மதுரை: நகைக்காக  மூதாட்டியை  கொடூரமாக கொன்றவன் கைது

மதுரை, ஆக.10-  மதுரை திருப்பரங்குன்றம் வேடர் புளியங்குளம் பகுதி யைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை (வயது 66). இந்த மூதாட்டி திருநகர் பகுதியில் சாலையோரங்களில் வசித்து  வந்துள்ளார். இந்த நிலையில் புதனன்று இரவு திருநகர்  மூன்றாம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரிக்கு பின்புறம் தலையில் ரத்த வெள்ளத்துடன் இறந்துகிடந்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த திருநகர் காவல் துறை யினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு ஆய்வு செய்தனர் அப்போது தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ப வரை பிடித்து விசாரித்தனர்,இதில் அவர்தான் இந்த குற்றத்தை செய்ததாகவும் மூதாட்டியிடம் இருந்த நகை யை திருடுவதற்காக அவரை நோட்டமிட்டு பாலியல் வன்புணர்வு செய்து தலையில் கல்லை போட்டு கொலை  செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை விசாரணை யில் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அலெக்ஸை கைது செய்தனர். மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கம்பத்தில் நூல் அறிமுக விழா 

தேனி, ஆக.10- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஹிரோஷிமா,  நாகசாகி நினைவு தினத்தை முன்னிட்டு கம்பம் நூலகத்தில்  நூல் அறிமுக விழா நடைபெற்றது தோசிமாருகி எழுதி கொ.மா.கோ. இளங்கோ அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட “மாயிசான் _ ஹிரோசிமாவின் வானம்பாடி” என்கிற நூலினை அறிமுகம் செய்தும் உலகப் போர், அணு ஆயுத தாக்குதல்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்தும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பி னர், எழுத்தாளர் தேனி சுந்தர் பேசினார். முன்னதாக, நூலகர் மணிமுருகன் வரவேற்றுப் பேசி னார். அறிவியல் இயக்க கம்பம் கிளைச் செயலாளர் திலீபன் நன்றி கூறினார். எம்.பி.எம். பள்ளி ஆசிரியர் பாண்டி நிகழ்வை ஒருங்கிணைத்தார். நிகழ்வில் 20 மாண வர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் பணம் செலுத்தி  நூலக உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப் பட்டது. நூல கத்தை தொடர்ந்து பயன்படுத்த வலியுறுத்தப்பட்டது.

சாலை விபத்தில்  அக்குபங்சர் மருத்துவர் பலி

தேனி, ஆக.10- திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி நல்லகண்ணு தெருவை சேர்ந்த வர் அருண்குமார்(37). இவர் அக்குபங்சர் டாக்டராக வேலைபார்த்து வந்தார். தற்போது இவர் தனது குடும்பத்துடன் ஆண்டிபட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி செல்வவிநாயகர் நகரில் வசித்துவந்தார். சம்ப வத்தன்று திருச்சியில் நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளிப்ப தற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.  வத்தலக்குண்டு டூவிலர் ஸ்டாண்டில் பைக்கை நிறுத்திவிட்டு திருச்சி சென்றார். மீண்டும் திரும்பிவந்து பைக்கை எடுத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். தேவதானப்பட்டி-ஆண்டிபட்டி சாலையில் திடீரென பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். படுகாயங்க ளுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திண்டுக்கல் ஆட்சியரகத்திற்கு  மாநகராட்சியிலிருந்து குடிநீர் வழங்கிட சிபிஎம் கோரிக்கை

திண்டுக்கல், ஆக.10- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியக்கவுன்சிலர் என்.செல்வநாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.  இது தொடர்பாக அவர் திண்டுக்கல் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  ஆத்தூர் காமராஜர் அணையிலிருந்து திண்டுக்கல் ஆட்சியர் வளாகம், அரசு ஊழியர் குடியிருப்பு, சமூக  நலத்துறை மூலம் இயங்கும் குழந்தைகள் காப்பகம், ஆகிய பகுதிகளுக்கு மாநகராட்சி மூலம் குழாய் இணைப்பு  வழங்கப்பட்டு கீழ் நிலைத் தொட்டி மூலம் தினசரி குடிநீர்  வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்க ளாக இந்த இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படு வதில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர் குடி யிருப்புகள் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு தனியாரிடம் கட்டணம் செலுத்தி குடிநீர் பெற்று  வருகிறார்கள். தற்போது கடுமையான வறட்சி காலமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மாநகராட்சி குழாய் இணைப்பு மூலம் மீண்டும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். (நநி)