districts

பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் ஓபிஎஸ் தம்பி மீது வழக்கு பதிவு

தேனி ,செப்.20- நிலப் பிரச்சனையில் ஓய்வு பெற்ற பெண் மருத்துவரை ஆபாச மாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி யும் பெரியகுளம் நகர் மன்ற  உறுப்பினருமான சண்முகசுந்தரம் மீது தென்கரை காவல் நிலை யத்தில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பா ளருமான ஓ. பன்னீர்செல்வத்தின் இரண்டாவது சகோத ரரான ஓ. சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சியின் 24- வது வார்டு உறுப்பினராக  உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் சகோதரர் வாங்கிய இடத்திற்கு அருகே ஓய்வு பெற்ற மருத்துவர்களான திருமலை மற்றும் விமலா தம்பதியினர் அவர்களது வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஓபிஎஸ் சகோதரர் வாங்கிய இடத்தில் மருத்துவர்களின் வீட்டின் அருகே வீடு கட்டு வதற்கான முதற்கட்ட பணிகளுக்காக குழி தோண்டப் பட்டது. இந்நிலையில் வீடு கட்டும் பணிகள் துவங்கப் படாத நிலையில் ஓபிஎஸ் சகோதரர் சண்முகசுந்தரம் தோண்டிய பள்ளத்தால் அருகே உள்ள ஓய்வு பெற்ற மருத்துவரின் வீட்டின் அஸ்திவாரம் மிகவும் சேதம் அடைந்து பாதிக்கும் நிலை ஏற்பட்டதாகவும் இதனை சரி செய்வதற்காக மருத்துவர் பணியாட்களை அனுப்பிய பொழுது ஓபிஎஸ் சகோதரர் மற்றும் மருத்துவர் திருமலை தம்பதியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட தாகவும் இதனைத் தொடர்ந்து மருத்துவர் திருமலை தம்பதியினர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் ஓபிஎஸ்ஸின் சகோதரர் கட்டடப் பணிகளை செய்ய விடாமல் தங்களை மிரட்டி வருவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

;