districts

மதுரை முக்கிய செய்திகள்

சட்ட விரோத மது, புகையிலை விற்றவர்கள்  மீது வழக்கு

தென்காசி ,அக். 25 தென்காசி மாவட்டத்தில்  கடந்த 23  , 24 ஆகிய  இரண்டு நாட்களில் பொது இடத்தில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்த 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 31 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 358 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொ ருட்கள் விற்பனை செய்த 2 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 4,568 ரூபாய் மதிப்பி லான 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 18,100 ரூபாய் மதிப்பிலான சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 42 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களி டம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 37,940 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் 192 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது, மேலும் வாகனத்தில் வேகமாக மற்றும் அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற சாலை விதிகளை மீறிய 953 நபர்கள் மீது சாலை விதி மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லிடைக்குறிச்சி அருகே மலை அடிவாரப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை, கரடி

திருநெல்வேலி, அக். 25- கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப் போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை கீழே இறங்கு கின்றன.  இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி அருகே மலை அடி வாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் பொட்டல் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக தந்தத்து டன் கூடிய ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்கு கிறது. மேலும் தற்போது கரடி ஒன்றும் மணிமுத்தாறில் உள்ள கோவில், காவல் நிலைய பகுதியில் சுற்றி திரி கின்றது. யானை மற்றும் கரடி சுற்றி திரியும் வீடியோக் கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், யானை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் அப்பகுதியி னர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

பாறையில் விசைப்படகு மோதி விபத்து 11 மீனவர்கள்  உயிர் தப்பினர்

திருநெல்வேலி, அக் .25- தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து. இவருக்கு சொந்தமாக இழுவை வலை விசைப்படகு உள்ளது. இந்த படகின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும் இந்த படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த 1-ஆம் தேதி தருவயை சேர்ந்த வினி என்ற மீனவர் தலைமையில் சுமார் 11 மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். திங்கட்கிழமை மீன் பிடித்து விட்டு சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பி  வந்து கொண்டிருந்தனர். அப்போது நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடல் பகுதியில் கரையில் இருந்து ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்தில் விசைப்படகு வந்து கொண்டி ருந்தபோது எதிர்பாராத விதமாக கடலில் இருந்த பாறையில் பயங்கரமாக மோதியது.  இதில் விசைப்படகின் அடிப்பகுதி சேதமடைந்து என்ஜின் இருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்தது. இதனால் விசைப்படையில் இருந்த மீனவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இடிந்தகரை மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து விசைப் படையில் இருந்த 11 மீனவர்களை மீட்டனர். அதற்குள் விசைப்படகு 95 சதவீதம் கடலுக்குள் மூழ்கி விட்டது. அதில் இருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கின. இதே போல் அவர்களுக்கு சொந்தமான ஏராளமான வலைகளும் கடலில் மூழ்கின.  தற்போது 95 சதவீதம் கடலில் மூழ்கியுள்ள விசைப் படகை மீட்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து இழுவை விசைப்படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக மூழ்கிய விசைப்படகை மீட்க தேவையான நடவடிக்கைகளை மீனவர்கள் மேற்கொண்டு வரு கின்றனர்.

வாகனம் மோதி  கல்லூரி மாணவர் பலி

திருநெல்வேலி ,அக். 25- நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த வர் அரவிந்த்(வயது 18). இவர் பேட்டையில் உள்ள ஒரு  கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்  சுப்பிரமணியன்(26). இவர் திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் அரவிந்தை அழைத்துக்கொண்டு நெல்லை க்கு சென்றார்.  மானூர் பல்லிக்கோட்டை அருகே சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்தி ருந்த அரவிந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுப்பிரமணியனுக்கு படுகாயம் ஏற்பட்டது.  தகவலறிந்து மானூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த அரவிந்த் உடல் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை சி.சி.டி.வி. காமிராக்கள் மூலம் தேடி வரு கின்றனர்.

நெல்லை சந்திப்பில்  திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்

திருநெல்வேலி,அக். 25- நெல்லை சந்திப்பு கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (65). இவர் ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் தொழிலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார். தினமும் இரவு தூங்க செல்லும் போது வீட்டு முன்பு வாக னத்தை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். செவ் வாய்க்கிழமை காலையில் எழுந்த முருகன் தனது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்பு லன்ஸ் வாகனத்தை துடை த்து கழுவி விட்டு டீ குடிக்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.  சிறிது நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள் முருகனிடம் ஆம்புலன்சில் இருந்து புகை வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் அங்கு ஓடி வந்தார். ஆனால் அதற்குள் ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்தது.உடனடி யாக பாளை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2 வாக னங்களில் வந்த தீயணைப்பு துறையினர் ஆம்புலன்சில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஆம்புலன்சின் பெரும்பகுதி எரிந்து விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந் திப்பு காவல்நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.  மர்ம நபர்கள் வாகனத் திற்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் முருகன் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இத னால் ஆம்புலன்சில் தீப்பற்றி யது விபத்தா? அல்லது மர்ம  நபர்கள் யாரேனும் தீ வைத்த னரா? என்ற கோணத்தில் தடய அறிவியல் துறை நிபு ணர்கள் உதவியுடன் விசார ணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத் தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

குடிசை வீட்டில்  தீ விபத்து எம்எல்ஏ உதவி

மயிலாடுதுறை, அக்.25- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிடைக்கழி ஊராட்சி பெருமாள் கோவில்பத்து தெருவில் வசிக்கும் சியமளா என்பவ ரது குடிசை வீடு, மின் கசிவினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. வீட்டி லிருந்த குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அனைத்து அடையாள அட்டைகள், சுமார் ரூ.5 லட்சம் மதிப்பி லான வீட்டு உபயோகப் பொ ருட்கள் என ஒட்டு மொத்த மாக தீயில் கருகி சாம்பலா யின. இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தின ரை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக நாகை  வடக்கு மாவட்ட செயலாள ருமான நிவேதா எம்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். 

நாளை குறைதீர் கூட்டங்கள் 

தஞ்சாவூர், அக்.25 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டத் திற்குட்பட்ட, பட்டுக் கோட்டை, பேராவூரணி வட்டார மாற்றுத் திறனாளி களுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்.27 ஆம் தேதி, (வியாழக் கிழமை) காலை 11 மணி யளவில் வருவாய் கோட்டாட் சியர் பிரபாகரன் தலைமை யில் நடைபெற உள்ளது. அதேபோல், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், அக்.27 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே, பட்டுக் கோட்டை மற்றும் பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சையில் 300 டன் குப்பைகள் அகற்றம்

தஞ்சாவூர், அக்.25 - தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேக ரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளப்பட்டு ஜெபமாலைபுரத்தில் உள்ள குப்பைக்கிடங்கு மற்றும் ஆங்காங்கே நுண்ணுரம் தயாரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுவது வழக்கம். குப்பைகள் குவிந்தன தஞ்சை காந்திஜி சாலை, ஆபிரகாம் பண்டிதர் சாலை, பைபாஸ் நிலைய பகுதி, அண்ணாசாலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழ அலங்கம், தெற்கு வீதி, கீழராஜவீதி, திலகர்  திடல் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் தரைக்கடைகளும்  வழக்கத்தைவிட அதிக அளவில் போடப்பட்டன. தீபாவளி பண்டிகை மற்றும் அதற்கு முந்தைய நாள், இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது. தீபாவளி கடைகள் அகற்றப்பட்ட பின்னர் குப்பைகளும் ஆங் காங்கே தேங்கிக் கிடந்தன. கடைவீதிகளின் அனைத்து பகுதிகளிலும், முக்கிய வீதி களிலும் வழக்கத்தைவிட குப்பைகள் அதிக அளவில் காணப்பட்டன. தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளும், தீபாவளி பண்டிகை நாளிலும் வழக்கமான குப்பைகளுடன், பட்டாசு குப்பைகளும் சேர்ந்ததால் 2 நாட்களில் குப்பைகள் அதிகமா கின. எனவே, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் 600 பேர் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த தூய்மை பணியில் லாரிகள், மினி லாரிகள், சரக்கு ஆட்டோக்கள் என  40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஏறத்தாழ 300 டன் குப்பைகள் அகற்றப் பட்டன. ஒரே நாளில் 2 மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவ.3இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி,அக். 25 தூத்துக்குடி மாவட்ட ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” வருகிற நவ.3ஆம் தேதி (வியாழக்கிழமை) நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக கார ணங்களை முன்னிட்டு 03.11.2022 அன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில்  நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெரு மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைக ளைத் தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.