தேனி, மே 24- நூறு நாள் வேலைத் திட்டத்தில் வருகைப் பதி வேட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக திருமலாபுரம் ஊராட்சி முன்னாள் பணித்தள பொறுப்பாளர்கள் மீது தேனி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் திருமலா புரம் ஊராட்சியில் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் தனியார் காளவாசல் முதல் மாலப்பட்டி வரை வாய்க்கால் சீர மைப்பு, மந்தையம்மன் கோவில் முதல் கருப்பத் தேவன்பட்டி, காமாட்சிதேவன் ஓடை வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு வாரம் நடந்தது. இப்பணிக்கு வருவோரின் வருகையை பணித்தள பொறுப்பாளர்கள் பால் கண்ணன், கயல்விழி பதிவு செய்த னர். வேலை நடக்கும் நாட்களில் பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9 மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர். பதிவேற்றம் செய்த சில நிமிடங்க ளுக்குள் அச்செயலியில் முன்னாள் பணித்தள பொறுப்பா ளர்கள் அருள்முருகன், மேனகா செயலியில் நுழைந்து பணிக்கு முறைகேடு செய்துள்ளனர் .மேலும் சம்பந்த மில்லாதவர்கள் புகைப்படத்தை மாற்றி பதிவு செய்துள்ள னர். இது குறித்து ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலு வலர் மலர்விழி புகாரின்படி சைபர்கிரைம் ஆய்வாளர் அரங்கநாயகி, சார்பு ஆய்வாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் அருள்முருகன், மேனகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.