districts

தேனியில் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்கு

தேனி, ஜூலை 12- தேனியில் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் நீதிமன்ற  உத்தரவின் பேரில் இரண்டு புகார்களின் பேரில் 4 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்  துள்ளனர். தேனி, பாரஸ்ட் சாலை, காசிநாடார் தெருவைச் சேர்ந்த வர் விஜயகுமார் மனைவி சௌந்தரவள்ளி. இவர், அதே  பகுதியைச் சேர்ந்த நாகமணி(69), அவரது மனைவி அமுதா(57) ஆகியோரிடம் ரூ.14.91 லட்சம் கடன் வாங்கி யிருந்தாராம். கடன் மற்றும் வட்டியாக ரூ.18.70 லட்சத்தை திரும்ப செலுத்திவிட்ட நிலையில், கடன் மற்றும் வட்டியாக மேலும் ரூ.12 லட்சத்து 54 ஆயிரத்து 726 தர வேண்டும்  என்று கேட்டும், கடன் பெறும் போது எழுதிக் கொடுத்தி ருந்த கடன் பத்திரம் மற்றும் வங்கி காசோலைகளை திரும்பத் தராமலும் தனது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தன்னை மிரட்டியதாகவும், இதற்கு தேனி அல்லிநகரம், அம்பேத்கர் நடுத்தெருவைச் சேர்ந்த நாகராஜ்(52) என்ப வர் உடந்தையாக இருந்ததாகவும் தேனி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் சௌந்தரவள்ளி புகார் மனு அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் அடிப்ப டையில் நாகமணி, அமுதா, நாகராஜ் ஆகியோர் மீது  கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் தேனி காவல் நிலை யத்தில் வழக்கு பதிந்துள்ளனர். மற்றொரு வழக்கு: தேனி, பாரஸ்ட் சாலை, 5வது தெரு வைச் சேர்ந்தவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெய மணி. இவர், போடி அருகே கூழையனூரைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி சுசீலா(65) என்பவரிடம் சில ஆண்டு களுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தாராம். இந்த கடன் தொகை மற்றும் உரிய வட்டியை திரும்பச் செலுத்தி விட்ட நிலையில், கூடுதலாக வட்டி கேட்டு கடந்த 2022, மே 2  ஆம் தேதி தனது வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தன்னை  மிரட்டியதாகவும் தேனி காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுசீலா, கம்பத்தைச் சேர்ந்த முருகன்  மனைவி பிரபாவதி(45) ஆகியோர் தேனி, என்.ஆர்.டி.,  சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே  தன்னை தாக்கி, மிரட்டல் விடுத்ததாக தேனி குற்ற வியல் நீதித் துறை நடுவர் மன்றத்தில் ஜெயமணி புகார்  மனு அளித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, இந்தப் புகாரின் அடிப்படையில் சுசீலா, பிரபாவதி ஆகியோர் மீது கந்து வட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.