districts

img

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜுலை 28- திண்டுக்கல்லில் கருப்பு பேட்ஜ் அணிந்து பிஎஸ் என்எல் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய பணமயமாக்கல்  திட்டத்தின் கீழ் பிஎஸ்என்எல், நிறுவனத்திற்குச் சொந்தமான  15 ஆயிரம் செல்போன் டவர்களை தனியாருக்கு தாரை வார்க்கும்  பாஜக அரசைக் கண்டித்தும், உடனடியாக 4ஜி சேவையை  துவக்க வேண் டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம்  முன்பாக வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  வைத்தியலிங்க பூபதி, அய்யனார்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.