மானாமதுரை, மே 11- மாற்றுத்திறனாளி பெண்ணை அடித்து துன்புறுத்திய மானா மதுரை காவல் ஆய்வாளர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ் வாயன்று நகராட்சி அலுவலகம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆண்டி தலைமை வகித்தார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீர பாண்டி, கருப்புசாமி, முத்துராம லிங்க பூபதி, ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர் விஜயகுமார், மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட துணைத் மலர்விழி, ஆறுமுகம் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளி பெண் நாகவள்ளி, அவரது தாயார் பார்வதி, சகோதரர் குமார் ஆகியோரை அடித்து துன்புறுத்திய காவல் ஆய்வாளர் மீதும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத சிவகங்கை டிஎஸ்பி மீதும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தப்பட்டன.