விருதுநகர். மே 26- விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மற்றும் விதி முறைகளை மீறி பல கல்குவாரி கள் செயல்பட்டு வருகின்றன, எனவே. அவற்றை மூட உத்தர விட வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தி னர். விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது, வேளாண் இணை இயக்குனர் பத்மாவதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் கோயில்ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: விஜயமுருகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): விவ சாயிகள் விவசாயத்திற்கு தேவை யான மண் எடுக்க அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால் மர்மநபர் கள் அதிகளவில் மண்ணை திருடி விற்கின்றனர். திருச்சுழி புலியூரான் கல்குவாரி, சிவகாசி பாறைப்பட்டி கல்குவாரிகளில் கண்மாய் பாதை, நீர்வரத்து பாதைகளை அடைத்து விதிகளையும் நீதி மன்ற உத்தரவையும் மீறி செயல் படுகின்றன. அவற்றை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ,விரூயமுருகன் தெரிவித்தார், அதற்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர். மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், அர்ஜூனா நதியின் குறுக்கே கன்னிசேரி பகுதியில் தடுப்பணை உள்ளது. இதில் பட்டாசு கழிவு கள் கலப்பதால் தண்ணீர் மாசடை கிறது என கணேசன் என்ற விவசாயி புகார் தெரிவித்தார்.
மடவார் வளாகத்தில் சந்தை அமைக்க கோரிக்கை
திருவில்லிபுத்தூரில் உள்ள மடவார் வளாகம் பகுதியில் சந்தை அமைக்க வேண்டும் என மோகன் ராஜ் என்ற விவசாயி கோரிக்கை விடுத்தார், நிலம் கிடைத்தால் அங்கு அமைக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என விற்பனைக்குழு செயலாளர் பதிலளித்தார், சாத்தூர் வெள்ளரிக்காய், ராஜ பாளையம் பஞ்சவர்ணம் மா, விருது நகர் கொடுக்காப்புளி, அதலக்காய் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பருத்தி யை கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். மாம்பழ ஏலத்தை உழவர் சந்தை யில் நடத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவடடத் தலைவர் ராமச்சந்திர ராஜா தெரிவித்தார், பொதுப்பணித்துறை கண்மாய் களில் மீன்பாசி குத்தகையில் பொ துப்பணித்துறை, வருவாய்த்துறை என இருதுறையும் இல்லாது மீன் வளர்ப்புத்துறையினர் ஏன் உள்ளே வருகின்றனர். கண்மாய் கட்டுப் பாடு 3 ஆண்டுகள் வரை அவர்க ளுக்கு செல்வதால் கண்மாயை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். செண்பகத் தோப்பில் விவசாயிகளிடமும் ரூ.20 வாங்கு கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என முத்தையா என்ற விவசாயி தெரிவித்தார், இவ்வாறாக விவாதம் நடை பெற்றது,