திருநெல்வேலி ,டிச .19- மறைந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பாப்பா உமா நாத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முக்கூடல், பாப்பாக் குடி, மயிலப்புரம் உட்பட பல்வேறு பகுதி களில் மாதர் சங்கம் சார்பில் அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் கற்பகம், மாதர்சங்க ஒன்றியசெயலாளர் லதா. பொருளாளர் வேணி.பார்வதி.கற்பகம் உள்பட 26 பெண்கள் கலந்து கொண்டனர்.