தேனி, ஏப்.13- பஞ்சாப் ராணுவ முகா மில் நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்த ராணுவ வீரர் தேவாரம் -மூனா ண்டிபட்டியை சேர்ந்த வர். இதனால் கிராமமே சோகமானது தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந் தவர்கள் ஜெயராஜ்-ரத்தினம் தம்பதியர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற் றும் யோகேஷ் குமார் என்ற மகன் உள்ள னர். பெண் பிள்ளைகள் இருவருக்கும் திரு மணமான நிலையில் யோகேஷ் குமார் இந் திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். தேவாரம் அருகே கோம்பை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி யில் படித்த இவர் உசிலம்பட்டி கல்லூரி யில் பட்டப்படிப்பு முடித்து கடந்த 3 ஆண்டு களுக்கு முன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது பஞ்சாபில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பஞ்சாப் ராணுவ முகா மில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப் பாக்கிச் சூட்டில் யோகேஷ் குமார் உள்பட 4 பேர் பலியானார். இதனை இந்திய ராணு வம் உறுதி செய்துள்ளது.இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந் துள்ளனர். அதோடு மூனாண்டிபட்டி கிராம மக்கள் மற்றும் அவரது நண்பர்கள், உற வினர்கள் என அனைவரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர். முகாமில் உயிரிழந்த யோகேஷ் குமா ரின் அவரது உடல் அடக்கம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான மூணாண்டிபட்டிக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படு கிறது.