மதுரை, நவ.11- மதுரை அம்பேத்கர் கல்வி மையம் , தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உரி மைகளுக்கான பாதுகாப் போர் சங்கம், சிஐடியு சார்பில் குரூப் - 2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட்டன. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருவர் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களை மாற்றுத்திற னாளிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நம்புரா ஜன், மாவட்டச் செயலாளர் பாலமுருகன், மாவட்டத் தலைவர் பி. வீரமணி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், துணை மேயர் டி. நாகராஜன் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், பயிற்சி ஆசிரியர் ராஜா ஆகியோர் மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.